tag:blogger.com,1999:blog-138347182024-03-08T16:47:12.956-08:00பொடியனின் மனப்பதிவுபொடியனுக்குப் பட்டவை அல்லது பொடியனின் அலசல்கள்IIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-13834718.post-1167945283414085892007-01-04T12:55:00.000-08:002007-02-01T00:11:07.086-08:00எனக்கென்ன?இடம்: வெள்ளவத்தை,கொழும்பு<br />காலம்: இற்றைக்கு சுமார் நான்கு நாட்களுக்கு முன்பு<br /><br />நண்பர் ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் நாங்கள் அனைவரும் கூடியிருந்தோம்.வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் கடற்கரைக்கு மிக அருகாமையாக வீடு,இங்கிருந்து பார்க்கும்போது இந்துமா சமுத்திரம் அலையும் நுரையுமாகத் தெரிந்தது.இடுப்புயரச் சுவரில் சாய்ந்தவாறு நண்பர் பேசிக்கொண்டிருந்தார் இரண்டு வருடத்திற்கு முந்தி அடித்த சுனாமி முதல் அன்றைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைதியின் பெயரால் கொல்லப்பட்ட சதாம் வரைக்கும் பேச்சுச் சுழன்றடித்தது.<br /><br />இன்னொரு நண்பர் வெளிநாட்டிலிருந்து சரக்கு வாங்கி வந்திருப்பதாகச் சொன்னதன் நிமித்தம் நானும் அங்கே மார்கழிக் குளிரில் கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழுவி நவீன சக்தி முற்றப் புலவனாக அமர்ந்திருந்தேன்.நாராய் நாராய் சைபீரிய நாராய் வடதிசை சைபீரியப் புல்வெளி தாண்டி தென்னிலங்கை வலசை வரும்போது இந்தப் பொடியனுக்கொரு வொட்கா வாங்கி வா நாராய் என்று பாடவேண்டுமெனத் தோன்றியது நல்லவேளை பாடவில்லை.பாடியிருந்தால் ஒரு குட்டி பூர்ஷ்வாவை நான் பெரிதும் ஒத்திருப்பதாக நண்பர் கொண்டிருக்கும் கருத்துக்கு நானே வலுச்சேர்த்தவனாவேன்.<br /><br />வெள்ளவத்தை நோக்கி வந்துகொண்டிருந்த வேளையில் வெளியே வெடிச்சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது முன்னெப்போதும் இல்லாத அளவு கொழும்பு புதுவருடத்தை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தது.பாதுகாப்புக் கெடுபிடிகள் சொல்லுந்தரமற்றிருக்க தமிழர்கள் இவ்வளவு ஆரவாரத்துடன் புதுவருசம் கொண்டாடமாட்டார்கள் என்று தோன்றியது.அதை நிரூபிப்பது போன்று பம்பலப்பிட்டி கழிந்து வெள்ளவத்தை வரும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடித்த சப்தத்தை மீறித் தெரிந்த நிசப்தம் நிலமையைச் சொல்லிற்று. பெரும்பான்மை இனத்தவர்கள் இவ்வளவு ஆரவாரமாக புதுவருடத்தைக் கொண்டாட என்ன காரணமாக இருக்கும்.கடந்த ஓரிரு வாரங்களாக இராணுவத் தளபதியும் சனாதிபதியும் மாறி மாறிச் சொல்லிவரும் இன்னும் ஓரிரு மாதங்களில் புலிகளை முற்றாக அழித்துவிடுவோம் இரண்டே வாரத்தில் கிழக்கைப் பிடிப்போம் இரண்டே மாதத்தில் வடக்கைப் பிடிப்போம் அதன் பிறகு தமிழனின் புடுக்கைப் பிடிப்போம் என்னும் உறுதி மொழியன்றி வேறென்னவாக இருக்கும்.<br /><br />இதில் தமிழனின் புடுக்கைப் பிடிக்கலாம் என்பதை விடப் போதையூட்டக் கூடிய அம்சம் எதுவும் சிங்களவர்களுக்குக் கிடையாது என்று தோன்றுகிறது.இதைச் சொன்னால் நண்பர் என்னைக் குறுந்தேசிய வாதி என்பார் என்பதால் அதையும் சொல்லவில்லை.சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை என்பது அவருக்கும் தெரியும்.அவர் வேலை செய்யும் அரச அலுவலகத்தில் அவருக்குக் கீழே உள்ளவர்களிடம் சமீப காலமாகத் தெரியும் திமிர்த்தனம் பற்றி என்னிடம் ஏற்கனவே குறைப்பட்டிருக்கிறார்.அதுமட்டுமன்றி அவர் தங்கியிருந்த வீட்டுக்காரன் அவரிடம் சொன்னானாம் வீட்டு வாடகை இரண்டாயிரம் ஏற்றியிருக்கு விரும்பினால் தந்துவிட்டுத் தங்கு இல்லாவிட்டால் நடையைக் கட்டு என்று.இதே வீட்டுக்காரன் வீட்டிற்குப் பிந்தி வருவது முதல் தமிழ்ப்பாட்டுப் போடுவது வரை நண்பர் சொன்ன நிபந்தனைகளுக்கு கீழிப்படிந்துதான் அந்த அறையை வாடகைக்கு விட்டிருந்தான்<br /><br />புலி இளைத்துவிட்டது அதன் பல்லை ஏற்கனவே புடுங்கி விட்டோம் இனி அதன் வாலைப் பிடித்துத் தூக்கி பாக்குநீரிணையிலோ நந்திக் கடலிலோ வீசிவிடுவதுதான் மிச்சம்.இதுதான் பெரும்பான்மைச் சிங்களவர்களின் நினைப்பாக இருக்கிறது.புலியை எறிந்தாயிற்று என்று கேள்விப்பட்ட மறுநிமிடமே கொழும்பில் மீண்டும் ஒரு 83ஐ உருவாக்கவேண்டும் என்பதும் அதனோடிணைந்த கனவு.தமிழனை மீண்டு லங்காராணிக்குப் பதில் லங்கா முடிதவில் ஏற்றி யாழ்ப்பாணம் அனுப்புவது முதற் கனவு,வெள்ளவத்தை முதல் கொழும்பு மெயின் ஸ்ரீற்,செட்டித் தெரு கதிரேசன் தெரு என கொழிக்கும் தமிழர் சொத்துகளை தமதாக்குவது இன்னொரு கனவு<br /><br /><br />சிங்களவனுக்குப் பயம் தெளிந்து போய்விட்டது இது மற்றைய நண்பரின் கருத்து.அந்த நண்பருக்கு இந்த குறுந்தேசிய பெருந்தேசிய வியாதிகளில் நம்பிக்கையில்லை பட்டதைப் பட்டெனச் சொல்லும் திடம்.அப்ப என்ன கொழும்பிலை பழையபடி குண்டு வைக்கவேணும் என்கிறீரோ இது தோழரின் நக்கல்.அப்ப அவன் வாகரையிலும் வன்னியிலும் குண்டு குண்டாகப் போட்டு ஒவ்வொருநாளும் இருபது இருபத்தைஞ்சு என்று கொல்ல பார்த்துக் கொண்டிருக்கலாம் என்கிறீரோ இது முதல் அன்பரின் பதிலடி.<br /><br />நீங்கள் இப்படிப் பண்ணிப் பண்ணித்தான் இன்றைக்கு இப்படி நிலைமைக்கு வந்திருக்கு,<br /><br />நாங்கள் இதையும் பண்ணாமல் விட்டிருந்தால் இண்டைக்கு தமிழனைத் தாட்ட இடத்திலை புல்லு முளைச்சிருக்கும்.<br /><br />அதுக்காக பொதுசனத்தைக் கொல்லுறதை ஏற்றுக்கொள்ள முடியாது.<br /><br />அப்ப தமிழன் செத்தால் மட்டும் பரவாயில்லையோ.<br /><br />யார் சொன்னது தமிழன் செத்தால் பரவாயில்லையென்று ஆனால் அரசாங்கம் செய்யுற பிழையளுக்கு அப்பாவிச் சிங்களச் சனத்தைப் பழிவாங்கக் கூடாது.<br /><br />ஆரண்ணை அரசாங்கம் வெளிநாட்டிலையிருந்து இறக்கினதே இவ்வளவு சனமும் தங்களுக்குள்ளையிருந்து தெரிஞ்செடுத்த ஆட்கள் தானே அண்ணை அரசாங்கம்.<br /><br />அப்ப குண்டு வெடிச்சா எல்லாம் சரியாயிடும் என்கிறீர்.<br /><br />இவ்வளவு நாளும் வெடிக்காட்டிலும் வெடிக்குமெண்ட பயம்தானே அண்ணை அவங்களை அமுக்கி வைச்சிருந்தது.<br /><br />அப்படியெப்பிடிச் சொல்லுவீர்.<br />அப்ப ஏனண்ணை எண்பத்தி மூண்டுக்குப் பிறகு இன்னொரு கலவரம் வரேலை.முல்லைத்தீவிலை ஆயிரத்தி முன்னூறு பேர்,ஆனையிறவிலை மூவாயிரம் பேரெண்டு செத்தும் சிங்களவன் ஏனண்ணை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவன்.<br /><br />அப்ப நீங்கள் குண்டுகளை வையுங்கோ,<br /><br />ஓமோம் நீங்கள் ஈராக்கிலை சதாம் சாகிறது பற்றியும்,கெப்பிற்றிகொலாவையிலை சிங்களவன் சாகிறது பற்றியும் மூதூரிலை முஸ்லிம் சாகிறது பற்றியும் கவலைப்படுங்கோ தமிழன் அன்றாடம் சாகிறது பற்றி வாயைத் திறக்காதையுங்கோ.<br /><br />உது அசல் குறுந்தேசிய வாதம்.<br /><br />உங்கடை வறட்டு மார்க்சீயம்<br /><br />விவாதம் சூடாகிறது வெளிநாட்டு நண்பர் மாக்கரீத்தாவுடன் ஸ்பிறைற் கலந்தபடி என்னைக் கேட்கிறார் உனக்கென்ன மாதிரி ஒன்றோ ரெண்டோ.நான் சொல்கிறேன் ஒன் த ரொக்.பாவி மார்க்கரீத்தா எல்லாம் மிக்ஸ் பண்ணி அடிக்கவேண்டியது ஒன் த ரொக் குடிக்கிற சாமானில்லை.நான் மறுக்கிறேன்.எனக்கு ஒன் த ரொக் தான் வேணும் இல்லாட்டி வேண்டாம்.மார்க்கரீத்தா தொண்டைக் குழியை எரித்துக் கொண்டு உள்ளே இறங்குகிறது நான் ஒரே மூச்சில் குடித்ததை பார்த்துக் கொண்டிருக்கும் தேசியவாத நண்பர் மற்றவருக்குக் கண்ணைக் காட்டுகிறார் மற்றவர் போத்தலை மூடி வைக்க முற்பட நான் தடுக்கிறேன் எனக்கு வேணும்.<br /><br />எனக்குத் தற்காலிகத் தேவை ஆளையடிக்கும் போதை,இவர்களது வாக்குவாதத்தை கேட்டால் பைத்தியம் பிடித்துவிடும் ஒரு உண்மையை சமாளிக்கலாம் இரண்டு உண்மைகள் ஒன்றுக்கொன்று முரணானவையாயிருந்தால் எப்படிச் சமாளிப்பது குட்டி பூர்ஷ்வா விழித்துக் கொள்கிறான் உன்னை மற உன்னையே மற இது உலகமயமாக்கல் காலம் இதில் நாடாவது இனமாவது கொள்கையாவது உலகமெல்லாம் உன் சொத்து நீ இந்த உலகின் சொத்து.<br /><br />இங்கு இலங்கையில் நான் கொண்டாடும் புதுவருடத்தை அங்கே அமெரிக்கனும் கொண்டாடப்போகிறான் ரஷ்யனும் கொண்டாடப் போகிறான் ஈராக்கியனும் கொண்டாடப் போகிறான் உலகமெல்லாம் ஒரே குடையின் கீழ் என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்.<br /><br />இப்போது உனக்குத் தேவை போதை ஆமாம் ஆளையடிக்கும் போதை<br /><br />ஒன்று, இரண்டு, மூன்று மார்க்கரீத்தா வெறும் ஐசின் குளிருடன் தொண்டையை புண்ணாக்கிக் கொண்டு உள்ளே செல்கிறது வெடிச்சத்தம் பலமாகக் கேட்கிறது பெரியதொரு மத்தாப்பு வெடித்து வானத்தில் பரவுகிறது.எவன் செத்தால் எனக்கென்ன எங்கை குண்டு வெடிச்சால் எனக்கென்ன ஹப்பி நியூ இயர்IIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-13834718.post-1166157535268268032006-12-14T20:35:00.000-08:002006-12-14T21:48:14.736-08:00மூதேவிகளின் ஒப்பாரி<a href="http://akaraa.blogspot.com/2006/12/blog-post_116614278760164899.html">மூதேவிகளின் ஒப்பாரி</a><br /><br />இந்தப் பதிவைதனிப்பட்ட தாக்குதலாகத் தமிழ்மணம் கருதுமானால் மூதேவியைத் தனிப்படத் தாக்கியதற்காக மூதேவியிடம் ஒரு பொடியன் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறான்IIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-13834718.post-1166151596602108242006-12-14T18:59:00.000-08:002006-12-14T18:59:56.613-08:00ஈழப்போராட்டத்தில் இன்னொரு வெற்றிடம்புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் இழப்பானது புலிகளுக்கு மட்டுமன்றி ஈழப்போராட்டத்தில் இன்னொரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. ஓரிரு நாட்கள் முன்னே இரத்தினசபாதியும் அவரைப் பிந்தொடர்ந்து அன்ரன் பாலசிங்கமுமாக நிரவப்படமுடியாத இரு வெற்றிடங்களை ஈழப்போராட்டத்தில் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.<br /><br />போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு இளைஞர்கள் குழுக்களுக்கு ஆலோசனை வழங்குவதிலும் அவர்களின் அரசியல் கொள்கைகளை வகுப்பதிலும் இயக்கங்களுக்கு வெளிநாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் சமநேரத்தில் ஈழத்தமிழர்தம் அவல நிலையை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறியும் வாழ்நாளில் பெரும்பங்கு ஆற்றியிருக்கும் இவ்விருவர் பங்கும் அவர்தம் மேற் தொடுக்கப்பட்ட விமர்சனங்களை மீறியும் போற்றப்படவேண்டியது.<br /><br />அன்ரன் பாலசிங்கம் ஈழப்போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் பக்கம் நின்று தனது பணியைச் சிறப்பாகவே ஆற்றியிருக்கிறார்.அவர் மீது எனக்கிருக்கும் விமர்சனங்களைச் சொல்ல இது நேரமில்லை என நினைக்கிறேன். அது மட்டுமன்றி ஈழப்போராட்டத்தின் சாட்சியமாய் இரண்டு நூல்களை 'போரும் சமாதானமும்','விடுதலை' எமக்கு விட்டுச் சென்றிருக்கிறார் அவை வெறும் வென்றவன் வரலாறு எழுதியதாய் இல்லாமல் ஈழப்போராட்டத்தின் பல்வேறு படிநிலைகளைப் புரிந்து கொள்ள ஆய்வேடுகளாக எழுதப்பட்ட நூல்களாகக் கருதுகிறேன்<br /><br />ஈழத்திற்கு இது இழப்புகளின் காலம் என்று தோன்றுகின்றது.கடந்த இரு மாதம் ஏ.ஜே,கடந்த வாரம் சுவி என ஈழத்து இலக்கிய உலகம் இரு பெரும் ஆளுமைகளை இழந்தது.இன்று அரசியல் உலகம் இரண்டு தத்துவ அறிஞர்களை இழந்து நிற்கிறது ஒரு வகையில் சொன்னால் இந்தக் கூற்றும் மிகைவரல் தான் ஏனென்றால் காவோலை விழுவதும் குருத்தோலை விரிவதும் காலத்தின் கட்டாயம் ஆனால் ஈழத்தில் குருத்தோலைகள் முளையிலேயே கருகிப்போய் விடுவது காவோலைகளின் இழப்பைப் பெரிதாகக் காட்டுகிறதுIIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-13834718.post-1166017184888464032006-12-13T05:39:00.000-08:002006-12-14T14:41:42.946-08:00ஈரோஸ் இரத்தினசபாபதி காலமானார்ஈரோஸ் அமைப்பின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான இரத்தினசபாபதி(மற்றவர் சங்கர் ராஜீ)இன்று லண்டனில் காலமானார்.<br /><br />ஈழத்தில் இனப்பிரச்சனை கொழுந்துவிடத்தொடங்கிய 1975ம் ஆண்டு தனது மார்க்சியக் கொள்கைகளின் அடிப்படையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முயலப்போவதாகக் கூறி ஈழ மாணவர் புரட்சிகர முன்னணியை லண்டனில் ஆரம்பித்தவர் இரத்தினசபாபதி,சமநேரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணி,பிரபாகரன் குட்டிமணி ஆதியோர்,சத்தியசீலன் சிவகுமாரன் ஆதியோர் என்று பலதரப்பட்ட இளைஞர்களும் ஈழப்பிரச்சனைக்கு ஆயுதப் போராட்டமே தீர்வு என்ற முடிவுக்கு வந்து கொண்டிருந்த காலப்பகுதி அது.<br /><br />முற்றுமுழுதாக மார்க்சிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு யாழ்,கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களையும் முஸ்லிம்கள்,மலையக தமிழ் இளைஞர்களையும் உள்ளடக்கி சிந்தனைப் படையாக ஆரம்பிக்கப் பட்டது ஈரோஸ் இயக்கம்.அதுவே முதன் முதலில் பாலஸ்தீன,லெபனான் விடுதலைப் படைகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தாம் பயிற்சி பெற்றதோடு புலிகள் மற்றும் ரெலோ இயக்கத்தினருக்கும் பயிற்சிகளை வழங்கி வந்தது.இவற்றுக்கு மூலகாரணம் இரத்தினசபாபதியும் அவரது வெளியுலகத் தொடர்புகளும்.<br /><br />இலண்டனில் இருந்துகொண்டே ஈழத்தில் போராட முடியுமா என்று பலமான விமர்சனத்திற்கு உள்ளானாலும் இயக்கத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு அதில் இணைந்தவர்கள் பலர் பாலகுமாரன்,அருளர்,கிபி அரவிந்தன் போன்றோர் அதில் முக்கியமானவர்கள்.<br /><br />இனப்பிரச்சனை சூடுபிடித்த எண்பதுகளில் ஈரோஸ் இயக்கம் சிந்தனைத் தளத்திலேயே ஈழத்தை வெல்லலாம் என்று தீவிரமாக நம்பியதால் அதனுடன் அதிருப்தியுற்ற அதன் மாணவர் அமைப்பு பிரிந்து போய் ஈபிஆர் எல் எப் ஐ ஆரம்பித்தது,அதிலிருந்து கிளைத்தவையே ஈபிடிபி,ஈ,என்டிஎல் எப்<br /> <br />பின்னர் காலப்போக்கில் ஈரோசின் தோழர்கள் பலரும் புலிகளுடன் சேர்ந்துவிட சங்கர் ராஜி தொடர்ந்தும் ஈரோஸ் என்ற பெயருடன் செயற்பட்டு வந்தார்.<br /><br />இன்று ஈழப்போராட்டம் திசைவழிப்பட்டு கிளைபிரிபட்டு வளர்ந்து வந்துள்ள வேளையில் அதன் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான இரத்தினசபாபதி ஈழப்போராட்டத்தில் தனது சாட்சியத்தை நூலாக வெளிக்கொணர வேண்டுமென்ற எனது வேணவா கனவாகவே போய்விட்டது.இனிமேலும் எஞ்சியிருக்கும் ஒன்றிரண்டு மூத்தவர்கள் தங்கள் போராட்ட வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முன்வராவிடின் ஈழப்போராட்ட வரலாறு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளினது வரலாறாக ஒற்றைத் தன்மையுடன் எழுதப்படுவதையோ அல்லது மறுதலையாக தலை இருக்க வாலாடின கணக்காக முகம்தெரியாதவர்களெல்லாம் தான் தான் ஈழப்போராட்டத்தை ஆரம்பித்தேன் என்று உரிமை கொண்டாடுவதையோ தடுக்க முடியாது.அதற்கு நல்லதொரு உதாரணம் ஏற்கனவே வெளிவந்திருக்கும் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூல்.<br /><br /><br />ஈழத்தை வெல்வதற்கு ஈரோஸ் வைத்திருந்த கொள்கைத் திட்டங்களும் அதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசிக்கக் கிடைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.அதன் அடிப்படையில் பார்த்தால் எண்பதுகளிலேயே நாம் ஈழத்தை வென்றிருக்கவேண்டும் இன்றும் போராட்டம் தொடர்கிறது என்றால் எங்கேயோ சில தவறுகள் சரிசெய்யப்படாமல் போய்விட்டதாகத் தோன்றுகிறது(இந்த வரியை மட்டும் வைத்துக்கொண்டு மாற்றுக்கருத்து அன்பர்கள் கிளித்தட்டு விளையாட வரவேண்டாம் உங்கள் கருத்து கருத்தாக இருக்கும் பட்சத்தில் மட்டும் பின்னூட்டத்தை அனுமதிப்பேன்)<br /><br />அதேவேளையில் முற்றுமுழுதாக மார்க்சியக் கொள்கைகளை வைத்துக்கொண்டே இனவிடுதலைப் போராட்டத்தை நடத்திவிட முடியுமா என்பதும் விவாதிக்கப்படவேண்டியது ஏனெனில் தேசியம் பற்றிய மார்க்ஸ்,மற்றும் லெனினின் கூற்றுகள் பலராலும் இஷ்டத்திற்குத் திரிக்கப்பட்டு தோழர்களால் விரும்பியபடி பயன்படுத்தப்படுவதை பார்த்திருக்கிறேன்<br /><br />அதேபோன்று ஈரோஸ் காலகட்டத்தில் நடந்த மாதிரி பகிரங்க விவாதங்கள் இன்றைய காலகட்டத்தில் சாத்தியமற்றுப் போனதற்கு விடுதலைப் புலிகளும் ஒரு காரணம் என்றாலும் ஜனநாயக முகமூடி போட்டுச் சுரண்டிக் கொழுக்கும் மாற்றுக் கருத்தாளர்களும் காரணம் என்றுதான் சொல்லவேண்டும் எங்கேயேனும் ஒரு தளத்தில் விவாதத்தை ஆரம்பித்தால் ஒன்று புலி ஆதரவு அல்லது எதிர்ப்பு.இரண்டையும் விட்டு விட்டு ஈழப்போராட்டத்தின் வெற்றி அல்லது தோல்வி பற்றி அது ஆரம்பமாகி 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் போகிற இந்த நேரத்திலாவது ஒரு நேர்மையான விவாதத்தை நடத்த முடியாதா எனக் கேட்க விரும்புகிறேன்IIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-13834718.post-1164187306321241092006-11-22T01:01:00.000-08:002006-11-22T16:43:12.606-08:00மந்திர விரல்களின் சொந்தக்காரன்யாழ்ப்பாணத்தில் கோவில்களில் திருவிழாக் காலங்களில் நாதஸ்வர தவில் கச்சேரிகள் முக்கிய இடம்பிடிக்கும்.ஒவ்வொரு திருவிழா உபயகாரரும் போட்டி போட்டுக்கொண்டு இரண்டு சோடி மேளம் நாலு சோடி மேளம் என்று ஏற்பாடு செய்வார்கள் அந்தக் கச்சேரிகளின் ரசிகர்களில் நானும் ஒருவன் அப்படியான கச்சேரிகளில் என் கவனத்தைக் கவர்பவை தந்தையும் மகனுமாக வாசிக்கும் கச்சேரிகள்.அளவெட்டி ஊரில் நிறைய தந்தை/மகன் தவில்க்குழுக்கள் இருந்தன அவர்கள் வாசிக்கும்போது மற்றவர்கள் வாசிப்பதை விடச் சுவாரசியமாக இருக்கும்.<br /><br />அப்படியொரு கச்சேரி பார்த்துக்கொண்டிருக்கிறேன்.பிரபலமான இரு தந்தை/மகன் தவில் கலைஞர்கள் நாதஸ்வரங்களின் சுரவரிசையில் மெல்ல ஆரம்பிக்கிறது தந்தைக்கும் மகனுக்குமான போட்டி போட்டியென்றால் தனியே தவில் வாசிப்பது மட்டுமல்ல அவர்களது முக பாவங்களையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.ஒரு நாதஸ்வரமும் தந்தையும் இன்னொரு நாதஸ்வரம் மகனும் என ஸ்வர வரிசைகளுக்கு தவில் வாசிக்கிறார்கள் எப்படித் தெரியுமா? <br />தவிலில் ஒரு ஆவர்த்தனத்தை வாசித்து விட்டு தந்தை மகனைப் பார்ப்பார் எப்படி என் வாசிப்பு.மகன் அதே ஆவர்த்தனத்தை அச்சொட்டாக வாசிக்கவேண்டும்.மகன் விடுவாரா என்ன அவரும் அப்படியே வாசித்து விட்டு எப்படி என்று இவரைப் பார்க்கிறார்.இவர் இன்னும் ஒரு புது ஆவர்த்தனம் வாசித்து விட்டு கழுத்தை நீட்டி இவரைப் பார்க்க அவர் புன்னகைத்தவாறே அதை ஒத்து வாசிக்கிறார் வாசித்து முடிக்க ஆமோதிப்பதுபோல தந்தை தலையசைத்துவிட்டு திரும்ப இன்னுமொரு ஆவர்த்தனம்.<br /><br />இப்படியே தொடர்ந்து தனி ஆவர்த்தனம் வருகிறது.நாதஸ்வரங்கள் இசைப்பதை நிறுத்திக் கொள்கின்றன தந்தைக்கும் மகனுக்கும் போட்டி உச்சத்தை அடைகிறது இருவரும் தவிலை வைத்து என்னென்னவோ வித்தை காட்டுகிறார்கள் அவர்களின் முகபாவமோ நடிகர் திலகத்தையும் மிஞ்சி விடுவதாக இருக்கிறது.வாசிப்பு உச்சத்திற்குப் போகும்போது தந்தை திடீரென்று நிறுத்திவிடுகிறார் கண்களிலிருந்து நீர்த்துளிகள் சிதறுகின்றன மகனது வாசிப்புக்கு தந்தையின் பெருமிதமும் அங்கீகாரமும் அது.மகன் மெதுவாக தந்தையை அணைத்துக் கொள்கிறார் உணர்சிகரமான அந்தர்ச் சம்பவத்திற்கு சாட்சியாய் நின்றதே அபூர்வமானதொரு தருணமாக என் மதில் பதிந்துபோய் விட்டது.<br /><br />@@@@<br />நாடு விட்டு நாடு சென்று பலவருடங்களின் பின்னர் மீண்டும் அந்த தருணத்தை மீட்டிப் பார்க்கும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது இன்னொரு தந்தை மகன் வடிவில் அவர்கள் அல்லா ராக்கா ஜாகீர் உசேன்.<br /><br />இந்தியாவின் இருபெரும் தபேலா மேதைகளான இருவரது தபேலா வாசிப்பையும் ஒலி வடிவில் கேட்டிருக்கிறேன் ஒளி வடிவில் பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் தான் கிடைத்தது <br /><br />தந்தையும் மகனும் இரு தபேலாக்களுடன் உட்கார்ந்திருக்கிறார்கள்,தந்தையின் தபேலா மரத்தினால் செய்யப்பட்ட பாரம்பரிய வடிவம் மகனுடையது உலோகத்தினால் செய்யப்பட்டு கொஞ்சம் நவீனம் பின்னணியில் ஒரு தம்புராவும் சாரங்கியும் உறுத்தாத வகையில் சுருதி கூட்டுகின்றன ஒரு நேரடி ஒளிபரப்பின் ஒரு பகுதியைத் தான் நான் பார்த்தேன் முழுமையான ஒளிபரப்புக் கிடைக்கவில்லை.அதுவே போதுமாக இருக்கிறது தந்தை/மகன் பாசத்தையும் தபேலா வாசிப்பையும் பரிமாறிக்கொள்ளும் காட்சியைப் பார்த்து அந்த நெகிழ்வான தருணத்தை மனதிருத்திக் கொள்வதற்கு.<br /><br /><img src='http://www.geocities.com/thamilmaravar/Allarakha.jpg'><br /><br />உஸ்தாத் அல்லா ராக்கா இந்தியாவின் ஒரு மூலையில் இந்துஸ்தானி இசைக்கும் மற்றைய இசைக்கருவிகளுக்கும் பக்கவாத்தியமாக இருந்த தபேலாவை உலகெங்கும் கொண்டு போனவர்.தபேலாவைப் பக்க வாத்தியமாக மட்டுமன்றி தனி வாத்தியமாகக் கூட வாசிக்கலாம் என்பதை பிரபலப்படுத்தியவர்.இன்றைய காலகட்டத்தில் தபேலாவின் ஈடு இணையற்ற கலைஞன் ஜாகீர் உஷேனின் தந்தை.<br /><br /><img src='http://www.geocities.com/thamilmaravar/g37972icfkw.jpg'><br /><br />1919ஆம் ஆண்டு ஜம்முவின் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த அல்லா ராக்கா தனது 12 ஆவது வயதில் தபேலாவைக் கற்க ஆரம்பித்து இருபத்தியோராவது வயதில் அகில இந்திய வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞராக இணைகிறார்.அதன் பின்னர் நாலைந்து வருடங்களில் இந்தித் திரைப்பட உலகிற்கு திரை இசை அமைப்பாளராக அறிமுகமாகினார்.1960 ல் மேதை ரவிஷங்கரின் ஆஸ்தான பக்கவாத்தியக் கலைஞனாக இடம்பிடித்துக் கொள்கிறார்.<br /><br />அதுவரை காலமும் தாளவாத்தியமான தபேலா சிதார்,ஷெனாய்,புல்லாங்குழல் போன்ற வாத்தியங்களுக்கும் பீம்சென் ஜோஷி,கிரிஜாதேவி போன்ற பாடகர்களுக்கும் பக்க வாத்தியமாகவே இருந்து வந்தது அதற்கென்று தனியொரு மதிப்பை உருவாக்கியவர் அல்லா ராக்கா ஸாரங்கி முதலிய வாத்தியங்களின் துணையுடன் தபேலாவில் கச்சேரி வாசிக்கும் முறையையும் பிரபலமாக்கியவர்<br /><br />அல்லா ராக்கா ரவிஷங்கருக்கு மட்டுமன்றி இன்னொரு மேதையான valayat khan க்கும் தபேலா வாசித்திருக்கிறார்.அதுமட்டுமன்றி பல்வேறு இந்துஸ்தானி,கர்னாடக இசைக்கலைஞர்களுக்கும் வாசித்திருக்கிறார் அதன் மூலம் தபேலாவை கர்னாடக சங்கீதத்தில் புகுத்தி அதன் மூலம் இரண்டு சங்கீதப் பிரிவுகளுக்கும் பாலம் அமைத்தவர் என்று குறிப்பிடுகிறார்கள்.மதுரை மணி ஐயருக்கு அல்லா ராக்கா பக்கவாத்தியம் வாசித்த இசைத்தட்டு ஒன்றுகூட என்னிடம் உண்டு<br /><br />மகன் ஜாகீர் உஷேனுடன் இணைந்து உலகநாடுகள் பூராவும் சுற்றுப்பயணம் செய்து அல்லா ராக்கா நடத்திய Tabla duet நிகழ்ச்சிகள் தபேலா ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்று இந்துஸ்தானி ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் பெரிதாகப் பேசப்பட்டவை.அவற்றுள் முக்கியமானது ஜேர்மனியில் விடிய விடிய நடந்த Indian music night நிகழ்வில் தந்தையும் மகனுமாக ஒருமணிநேரம் வாசித்த Tabla duet-Theen taal<br /><br />அப்படியொரு நிகழ்வு(கல்கத்தாவில் நடைபெற்றது) ஒன்றின் ஒளிப்பதிவையே நான் பார்த்தேன்.மிகவும் உணர்வுபூர்வமானதொரு நிகழ்வு அது அதற்கு முன்பே தந்தை மகன் இணைந்து வாசித்த மூன்று வெவ்வேறு இசைத்தட்டுகளைக் கேட்டிருக்கிறேன்.அதை விட அல்லா ராக்காவின் தனியிசைகள் சிலவற்றையும்,ஜாகீர் உஷேனின் தனியிசைகளையும் கேட்டிருக்கிறேன் இரு மேதைகளையும் அதுவும் அப்பா மகன் என்ற உறவு முறையோடு ஒருங்கே கேட்பது சுகமான அனுபவம்.பொக்கை வாய் நிறையச் சிரிப்புடன் அல்லா ராக்கா வாசிப்பதையும் ஒரு சிறுவனின் குதூகலத்துடன் ஜாகீர் உஷேன் அப்பாவுக்கு இணையாக நடப்பதையும் காண்பதும் மனநிறைவான அனுபவம்<br /><br />முதன் முதலில் Tabla duet என்ற பெயரைக் கேட்கும் போது என்னடா இது என்று நினைத்தேன் கேட்ட பிறகுதான் இரண்டு தபேலாக்களும் இணையும் இந்த நிகழ்வுக்கு என்ற பதத்தைத் தவிர வேறெந்தப் பதமும் பொருத்தமாகவே இருக்காதெனத் தோன்றியது.இரண்டு தபேலாக்களுடனும் இருபது விரல்கள் கூடுவதும் பிரிவதும் அவற்றிலிருந்து பிறக்கும் ஒலி இணைவதும் பிரிவதும் ஊடுவதும் கூடுவதும் ஒன்றையொன்று துரத்துவதும் இணைந்து சிறு தூரம் பிரயாணிப்பதும் ஒன்றைவிட்டு ஒன்று நிற்பது போலப் போக்குக் காட்டுவதுமாக கேட்பவரைக் கட்டிப் போட்டுவிடும் நிகழ்வு Tabla duet<br /><br />ஜாகீருடன் மட்டுமன்றி இன்னொரு மகனான பாசல் குறேஷியுடனும் அல்லா ராக்கா தபேலாக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார்<br />கிழக்கும் மேற்கும் இணைவு என்ற கருப்பொருளில் அமெரிக்காவின் பிரபல Jaaz Drummer Buddy rich உடன் இணைந்து அல்லா ராக்கா உருவாக்கிய 'Buddy a la rakha' இசைத்தொகுப்பு இந்தியாவைத் தாண்டியும் பேசப்பட்டது<br /><br />"Tabla உலகின் ஐன்ஸ்டீன் அல்லா ராக்கா" என்று மறைந்த Drummer mickey hart அல்லா ராக்காவைப் பாராட்டியதோடு அல்லாமல் அவரை தனது குருவாகவும் அறிவித்திருக்கிறார்.<br /><br />தந்தை மகன் இணைந்து படைத்தவற்றுள்Together,shared moment,maestro's choice ஆகிய இசைத்தட்டுகளும் சில உதிரிகளும் என்னிடம் உள்ளன அவற்றுக்கு விரிவான விமர்சனம் எழுத எனக்கிருக்கும் தபேலா அறிவு போதாது<br /><br />அல்லா ராக்கா ஜாகீர் இணைந்து வழங்கிய அல்லது தனியே அல்லா ராக்கா வாசித்த தீன் தால்-விளம்பித காலம் கேட்டுப்பாருங்கள் அல்லா ராக்காவை மந்திர விரல்களின் சொந்தக்காரனென்று ஏன் சொல்கிறார்கள் என்பது புரியும்IIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-13834718.post-1163683767527384302006-11-16T05:22:00.000-08:002006-11-20T08:05:17.636-08:00வாஸந்தி ஆடும் கண்டி நடனம்பலமுறை பலரும் வலைப்பதிவுகளில் விவாதித்த விடயம் தான் இது.என்றாலும் வாஸந்தி காலந்தோறும் தன் விஷக் கொடுக்குகளின் கூர்முனையை புதுப்பித்தபடியும் சந்தர்ப்பம் கிடைக்கும் பொதெல்லாம் எங்காவது பாய்ச்சியபடியும் அலையும் கருந்தேளாகவே இன்னமும் இருப்பதால் இதை எழுத வேண்டியதாகிறது.<br /><br />ஈழப்போராட்டத்தின் மீதான வாஸந்தியின் தாளாத கோபம் என்பது திடீரென்று வந்து குதித்ததல்ல.தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்களின் நீட்சியாகவே வாஸந்தி ஈழப்போராட்டத்தையும் காண்கிறார்.திராவிட இயக்கத்தின் மீதான தனது கோபங்களின் தொடர்ச்சியை,தமிழ்த் தலைவர்களின் மீது விமர்சனம் என்ற பெயரில் தான் கக்கும் விஷங்களை ஈழப்போராட்டத்தின் மீதும் காட்டுவது தற்செயலான ஒன்று அல்ல.வாஸந்தியின் அடி மனதில் புரையோடிப் போயிருக்கும் திராவிட எதிர்ப்பின் வெளிப்பாடு இதுவெனக் கொள்ளலாம்.<br /><br />இதை வாஸந்தியின் ஆதிக்கசாதித் திமிர் அதனால் இயல்பாகவே எழுந்த திராவிட எதிர்ப்பு என்ற விதத்தில் பலரும் அணுகுகிறார்கள்.அது உண்மையாகவும் இருக்கலாம் ஆனால் இங்கு பார்ப்பனர்,எதிர்-பார்ப்பனர் என்ற சுழலுக்குள் இந்தக் கட்டுரையைக் கொண்டு போக விரும்பாமையினால் வாஸந்தியின் துரத்தும் இறந்த காலம் அச்சுறுத்தும் நிகழ்காலம் என்ற கட்டுரையின் எதிர்வினையாக அணுகலாம் என நினைக்கிறேன்.<br /><br />கடந்த மாத தீராநதி இதழில் கேதீஸ் லோகநாதனின் மறைவையொட்டி வாஸந்தி எழுதிய கட்டுரைக்கு இந்த மாத தீராநதியில் கவிஞர் தாமரை,பேராசிரியர் சிவசேகரம் உட்படப் பலர் பதிலளித்திருக்கிறார்கள்.<br /><br />கேதீஸ் போன்ற ஆளுமைகள் மீது எனக்கு பல்வேறு விமர்சனங்களிருப்பினும் மதிப்பும் நிறைய இருக்கிறது.அந்த மதிப்பு என்பது அவர்களின் கல்வி கேள்விகளின் பாற்பட்டது அல்ல.கொழும்பில் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உயர்கல்வி வரை வெளிநாட்டிலேயே கற்ற ஒருவர் இலங்கையின் யுத்த்தச் சூழலையொட்டி இலகுவாக மேற்கொள்ளக் கூடிய தீர்மானம் வெளிநாட்டிற்குப் புலம்பெயர்ந்து அங்கேயே காலத்தை ஓட்டுவதாகும் ஆனால் கேதீஸ் தனக்கென்றொரு கோட்பாட்டை வகுத்துக்கொண்டு அதன் பாதையில் போயிருக்கிறார்.<br /><br />இது ஒரு புலிவீரனின் தியாகம் எனப்படுவதற்கு எந்த விதத்திலும் குறைவுடையதல்ல.அவர் தனக்கென்று தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதையான அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுதல் என்பதுதான் அவரது அர்ப்பணிப்பைப் புறந்தள்ளி அவரை துரோகியாகவும் காட்டிக்கொடுப்பாளனாகவும் கருத வைத்திருக்கிறது.அரசாங்கப் பணிகளில் ஈடுபடுவதென்பதே தவறென்றால் இன்றைக்கு ஆசிரியர் முதல் அத்தனை அரசாங்க உத்தியோகத்தர்களையும் போட்டுத் தள்ளுவதென்பதுதான் தீர்வாக இருக்கும்<br /><br />பலரும் நினைப்பதுபோல கொழும்பு மேல்தட்டுத் தமிழர்கள் பலர் பணத்துக்காக ஆசைப்பட்டு இந்தப் பதவிகளை ஏற்றுக்கொள்வதாக நான் நினைக்கவில்லை கேதீஸ் நினைத்திருந்தால் சர்ச்சைக்குரிய வேலைகளை விட்டுவிட்டு புலிகளின் கண்ணிலேயே படாத ஒரு வேலைக்கு போயிருக்கலாம் வணிக நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்த அவரை ஆரம்பம் முதலே அரசியல் நிர்வாகப் பாடங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது வெறுமனே பணமாக இருக்காது அதையும் மீறி மக்கள் தனது இனத்தின் இருப்பு சட்டபூர்வமாக தமிழனுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை எப்படியாவது வென்றெடுத்துவிடலாம் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம் என்கிறார் டி.பி.எஸ்.ஜெயராஜ்<br />.ஆரம்பம் முதலே தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகவே இனங்காட்டி வந்த கேதீஸ் அரசாங்க சமாதானச் செயலகப் பணியில் இருக்கும்போதே ஈழவாதியென்று ஜேவிபியின் தாக்குதல்களை எதிர்கொண்டவர்.ஜேவிபியின் அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகவே அவரைக் கொட்டி(புலி) என்று அழைத்திருக்கிறார்கள்<br /><br />இதேவேளை புலிகளின் செயற்பாடுகள் பற்றி கேதீஸ் வைக்கும் காட்டமான விமர்சனங்கள் சிங்களப் பத்திரிகைகளால் அவர்கள் நலன்கருதிப் பெரிதுபடுத்தப்பட்டன.இதனால் புலிகளின் வெளிப்படையான எதிர்ப்பையும் கேதீஸ் சம்பாதித்திருக்கிறார்.<br /><br />இன்று இலங்கையின் தலைவிதியைத் தீர்மானிப்பதாக மகிந்த சிந்தனை இருக்கிறது ஒப்புக்குச் சப்பாணி போல சமாதானச் செயலகங்களை ஏற்படுத்தி கேதீஸ் போன்றவர்களை வெளிப்பார்வைக்கு வேலைக்கமர்த்தினாலும் மகிந்தவும் அவருடைய ராஜபக்ச சகோதரர்களும் இணைந்து ஏற்படுத்திய மகிந்த சிந்தனையே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.அந்த சிந்தனைதான் லக்ஷ்மன் கதிர்காமர் முதல் கேதீஸ்,ரவிராஜ் வரை யாரை எப்போது போட்டுத்தள்ள வேண்டும் என்று தீர்மானிக்கிறது.<br /><br />மகிந்த சிந்தனையின் தீர்மானத்தின்படிதான் பண்டாரநாயக்கா சர்வதேச கற்கைகள் நிலையத்திற்கு பணிமாற்றலாகப் போகவேண்டிய கேதீஸை மகிந்தவால் ஏற்படுத்தப்பட்ட சமாதானச் செயலகத்தின் செயலாளர் நாயகமாகப் பணியமர்த்தியது.ஜே ஆர் காலத்திலிருந்து கைக்கொள்ளப்பட்டு வரும் தந்திரமான உத்தி இப்படியான பதவியொன்றில் தமிழர் ஒருவரை இருத்தி அவருக்கு அரச பத்திரிகைகள் மூலம் முக்கியத்துவம் கொடுத்து வெளியுலகின் பார்வைக்கு தமிழர் ஒருவரே தமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்கிறார் எனக் காட்டுவது.மகிந்த அரசில் அந்தப் பலிகடா கேதீஸ்.<br /><br />மகிந்தவின் செயற்பாடுகளாலும் அரச படைகளால் கணக்கு வழக்கின்றிக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளாலும் கேதீஸ் அதிருப்தியுற்றிருக்கிறார்.தான் பணிபுரியும் சமாதானச் செயலகமே ஒரு கண்துடைப்பு என்று புரிந்துகொண்டிருக்கிறார்.அதிலிருந்து விலகப்போவதாக தெரிவித்தபோது மகிந்தவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச கேதீசை மிரட்டியிருக்கிறார்.உச்சக்கட்டமாக மூதூரில் 17 அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் அரசபடைகளால் கொல்லப்பட்டதையிட்டு அதிர்ச்சி அடைந்த கேதீஸ் அது சமப்ந்தமாக தனது தனிப்பட்ட தொடர்புகள் மூலம் விசாரித்து தகவல்கள் சேகரித்திருக்கிறார்.இவை கேதீசின் மனைவி பவானி வாயிலாக வெளிவந்த தகவல்கள்.<br /><br />சமீப காலமாக கேதீஸ் புலிகளுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைத்ததில்லை.பேட்டிகளோ கருத்துகளோ வெளியிட்டதில்லை.அது மட்டுமன்றி அவர் இருக்கும் பதவி கூட பொம்மைப் பதவிதான் என்று சாதாரண அரசியல் புரிந்தவர்களுக்குக் கூட தெரிந்திருக்கும்.ஆக புலிகள் கேதீசைக் கொலை செய்திருப்பின் அதனை மூன்று வருடகாலங்களுக்கு முன் செய்திருக்க வேண்டும் இப்போது செய்வதற்கு காரணமே இல்லை<br /><br />செஞ்சோலை படுகொலைகள் மூலம் சரிந்து போன பெயரை தூக்கி நிறுத்தவும் எதிரான ஒருவரை அகற்றவும் புலிகளுக்கு சர்வதேச சமூகத்தில் கெட்ட பெயர் உருவாக்கவும் என்று பல மாங்காய்களை ஒரே கல்லில் அடிக்கும் ம்கிந்த சிந்தனையின் விளைவு தனக்கு பாதுகாப்புக்காக வருபவர்களுடன் வந்த புதியவர்கள் சிலரால் கொல்லப்பட்டார்<br /> <br />இவ்வளவும் இருக்க கேதீசும் மனைவியும் தனக்கு 20 வருடங்களாக நண்பர்கள் என்று கூறிக்கொள்ளும் வாஸந்திக்கு இது தெரியாமற் போனதேன்.பவானிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டால் இவ்வளவையும் சொல்லியிருப்பாரே.<br /><br />இங்கேதான் வெளிப்படுகிறது வாஸந்தியின் விஷக்கொடுக்கு பண்டாரநாயக்கர்களும் ராஜபக்சேக்களும் அடிக்கும் தாளத்துக்கு கண்டியன் நடனம் ஆடுவதன் மூலம் இந்திய அரசியலில் உள்ள சிலருக்கு தன்னை விசுவாசமான நாயாக நிரூபிக்க முயல்கிறார் வாஸந்தி.அதற்கான சாக்குப்போக்கு கேதீசின் மரணம் அதனை வைத்து தனது அரசியல் நாடகத்தை மகிந்த அரங்கேற்றிக்கொண்டு போக புலிகள் மீதான தனது எதிர்ப்பைக் காட்ட சிறந்த சந்தர்ப்பமாக வாஸந்தி பயன்படுத்திக் கொள்கிறார்.<br /><br />இலங்கையில் அமைதிப்படை செய்த அட்டூழியங்கள் தொடக்கம் இந்திய மாநிலங்களில் இந்திய இராணுவம் செய்யும் அத்துமீறல்கள்,தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் கட்டவிழ்த்து விடும் வன்முறை,சிவராம்,நிர்மலராஜன்,ஜோசப் பரராஜசிங்கம்,ரவிராஜ் என்று நீளும் அரச படைகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல்,செஞ்சோலை குண்டுவீச்சு,பாலியல் வன்முறைகள் எதையுமே வாஸந்தியால் விமர்சனமின்றி <br /> ஏற்றுக்கொள்ள முடியும் புலிகளைத் தவிர.<br /><br />இன்று கிழக்கிலங்கையில் முஸ்லிம்கள் சாவதைப் பற்றிக் கவலைப்படும் வாஸந்தி குஜராத் கலவரம் பற்றி ஏதாவது கண்டனம் தெரிவித்திருக்கிறாரா ஏன் இந்த இரட்டை வேடம்?இந்திய இராணுவத்தால் யாழ் வைத்தியசாலை வைத்தியர்கள்,பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.அவர்களெல்லாம் புத்திஜீவிகளாக வாஸந்தி கண்ணுக்குத் தெரியவில்லையா?<br /><br />வன்முறையை விரும்பாத ஜனநாயகப் பிம்பத்தை வாஸந்தி பொருத்திக்கொண்டதாக நினைக்கிறார் அது கண்டி நடனம் தான் என்று எல்லோருக்கும் தெரிகிறது.தீராநதியில் இத்தனை பேர் வாஸந்திமேல் பாய்ந்திருப்பதே சாட்சிIIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-13834718.post-1162743180146587352006-11-05T08:01:00.000-08:002006-11-07T11:49:55.853-08:00உங்களுக்கு என்ன பிடிக்கும்?உங்களுக்கு என்ன பிடிக்கும்?இது என்னைப் பார்த்து கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டிருந்த ஒருவர் கேட்ட கேள்வி.அவர் மட்டுமல்ல சிறிது நேர உரையாடலின் பின் எவரும் சர்வ சாதாரணமாகக் கேட்கும் கேள்வி இதுதான்.<br /><br />எதிரில் உரையாடிக் கொண்டிருப்பவரை எடைபோட மிக எளிதான வழி இந்தக் கேள்வி என்கின்றன உளவியல் ஆராய்ச்சிகள்.ஒருவருக்குப் பிடித்தது பிடிக்காததை வைத்து அவரை மிகச் சுலபமாக அணுகலாம் என்கின்றன அவை<br /><br />இந்தக் கேள்வியை என்னிடம் யாராவது கேட்கும் போதெல்லாம் மிகச் சங்கடமாக உணர்கிறேன்.எனக்குப் பிடித்ததுதான் என்ன என்பது இன்றுவரை விடை தெரியாக் கேள்வியாக இருக்கிறது.விவரம் தெரிந்த நாள்முதல் என்னையே நான் கேட்டு வரும் கேள்விதான் இது ஆனாலும் இன்றுவரை விடை தெரியவில்லை.<br /><br />என்னுடைய நண்பர்கள் சிலரைப் பார்க்கிறேன் ஒவ்வொருத்தரும் தன்னுடைய துறை என்ன,பொழுதுபோக்கு என்ன,விளையாட்டு என்ன,பிடித்த சாப்பாடு என்ன என்று வகைப்படுத்தும்போது ஆச்சரியமாக இருக்கும்.எப்படி இவற்றை வகைப்படுத்துகிறார்கள்?அறிவியலின் படி பிடித்தது பிடிக்காதது என்பது முதன் முதலில் உங்களுக்கு ஏற்படும் அனுபவத்தின் அடிப்படையில் எழுபவை.<br />நண்பர் ஒருவர் இருக்கிறார் இதுவரைக்கும் பாகற்காயைச் சாப்பிட்டதே இல்லை ஆனால் பாகற்காய் தனக்குப் பிடிக்காது என்கிறார்.கசப்புத் தான் அவருக்குப் பிடிக்கவில்லையா என்றால் பாகற்காயை விட கசப்பானவற்றை அவர் விரும்பி உண்பதைப் பார்த்திருக்கிறேன்.எங்கிருந்து வருகிறது இந்த வேண்டுதல் வேண்டாமை.<br /><br />இன்னொருத்தர் இருக்கிறார் அவருக்கு ஐஸ்கிறீம் மிக விருப்பம்.உங்களுக்கு மிகவிருப்பான பொருளை அளவுக்கதிகமாக விரும்பிச் சாப்பிடுவீர்களா இல்லையா?இவர் சாப்பிடமாட்டார் கேட்டால் அப்படிச் சாப்பிட்டால் விருப்புக் குறைந்து விடுமாம் எப்போவாவது அருமையாகச் சாப்பிட்டால் தான் அது என்றைக்கும் விருப்பமானதொன்றாக இருக்குமாம்.எதை வைத்து தனக்கு ஐஸ்கிறீம் பிடிக்கும் என முடிவு செய்கிறார் இவர்.<br /><br />விருப்பு வெறுப்பு மட்டுமல்ல ரசனையும் ஏதோ ஒருவகையில் வழக்கம் சார்ந்தது என நினைக்கிறேன்.திடீரென ஒருவர் கர்நாடக இசைப்பிரியராகவோ கலைப்பட ரசிகராகவோ மாறிவிடச் சாத்தியமில்லை.ஏதாவதொரு நெகிழ்ச்சியானதொரு தருணத்தை அல்லது கணத்தை இசையோ,படமோ அல்லது ஒரு கவிதையோ உருவாக்கிவிடும்போது அவர் அதனைத் தனக்கு அணுக்கமானதாகக் காண்கிறார் அதை தனது விருப்பத் தேர்வாகக் கொள்ள ஆரம்பிக்கிறார்.அதையொத்தவை மீதான நாட்டம் நாளடைவில் ரசனையாக மாறிவிடுகிறது.<br /><br />இது சாதாரண மனித உளவியலைப் பொறுத்தளவில் சர்வசாதாரணமான செயற்பாடு.ஆனால் உண்மையில் பார்த்தொமானால் மூளையின் ஞாபகப் பரப்புகளில் சிறிதாக நாங்கள் ஏற்படுத்தும் விகாரம் அந்த விகாரம் இசையை ரசித்தல்,கவிதையை நயத்தல் என்று மென்விகாரமாகவும் இருக்கலாம் அல்லது ஒரு கொலையொன்றை விரும்பிச் செய்தல்,அல்லது உங்களை அறியாமலே திருட்டின் மீது நாட்டம் என்று வன்விகாரமாக இருக்கலாம்<br /><br />பல்வேறு பிரபலங்களுக்கு சிறு சிறு பொருட்களைத் திருடுவது மிக உவப்பானதொன்றாக இருந்திருக்கிறது.பல தொடர் கொலைகளைச் செய்தவர்களை விசாரித்த உளவியல் நிபுணர்கள் அவர்களுக்கு அந்தக் கொலையைச் செய்ததற்கான காரணம் எதுவும் இல்லை என்கிறார்கள்.<br /><br />இந்தத் திருட்டுகளையோ கொலைகளையோ செய்தவர்கள் அதனை நாம் இசையை ரசித்தல் போலவும் ஓவியத்தை ரசித்தல் போலவும் ரசனைக்குரியதொன்றாகவே அவற்றைச் செய்திருக்கிறார்கள்.அவர்களை விசாரிக்கும் உளவியல் நிபுணர்கள் அவர்களுக்கு மெலிதான மனநோய் என்று தீர்ப்பு வழங்குகிறார்கள் என்றால் நாங்களும் ஒருவகையில் மனநோயாளர்கள் தாமே இல்லையா?நிர்ச்சலனமாக இருந்த மூளைக்குள் இது எனக்குப் பிடிக்கும் இது எனக்குப் பிடிக்காது என்று திணித்து வைத்துவிட்டு பின்னர் அதன் கட்டளையை ஏற்றுச் செயற்படுகிறோம் இல்லையா.<br /><br />இப்போது என்னுடைய பிரச்சனைக்கு வருவோம்.எனக்குப் பிரச்சனையே எனக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது என்று வரையறை செய்து கொள்ள முடியாமல் இருப்பதுதான்.எதுவுமே பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை எனது மூளை எதையும் திணிக்க அனுமதிக்கவில்லை விகாரமடையாத மூளை என்று சந்தோசப்பட்டுக் கொள்ளலாம் ஆனால் எனக்கோ எல்லாமே பிடித்திருக்கிறதே அதுதான் பிரச்சனை<br /><br />சங்கீதம் பிடித்திருக்கிறது அது கர்நாடகமா,ஹிந்துஸ்தானியா,மேலைத்தேயமா என்றால் மூன்றுமே பிடிக்கிறது,ஆக்க இலக்கியத்தின் எல்லாக் கூறுகளும் பிடிக்கின்றன.நிறைய வள வளவென்று பேசவும் பிடிக்கிறது பேசாமல் மோனத் தவத்தில் ஆழவும் பிடித்திருக்கிறது.படங்கள் பிடிக்கின்றன,பரதநாட்டியம் பிடிக்கிறது டப்பாங்குத்தும் பிடிக்கிறது.<br /><br />ஒருவர் எனக்கு என்ன பிடிக்கும் என்று என்னைக் கேட்கும்போது இவற்றில் எதைச் சொல்வது எதை விடுவது என்பது தலைபோகிற விடயமாக இருக்கிறது.சிலநேரங்களில் நான் எனக்கு இவை பிடிக்கும் எனச் சொல்வது என்னைப் பற்றிய பிம்பமொன்றை எதிராளிக்கு உருவாக்கிவிடுகிறது என்றால் பலநேரங்களில் எனது தேர்வுகளாக அவ்வப்போது நான் சொல்பவை எதிராளி தன்னைப் பற்றி என்னுள் ஏற்படுத்த நினைக்கும் பிம்பத்திற்குச் சாதகமாய் அமைந்துவிடுகின்றன<br /><br />சில இடங்களில் எனக்குப் பிடித்தவையாக வாய்க்கு வந்ததைச் சொல்லிவிடுகிறேன்.இப்படித்தான் ஒருமுறை ஒருவர் கேட்டார் தம்பிக்கு என்ன பிடிக்கும்.நானும் இசை,இலக்கியம் என்பவற்றோடு ஓவியம் என்று சொல்லிவிட்டேன்.வந்தவர் ஒரு ஓவியர் யாருடைய ஓவியம் பிடிக்கும் பிக்காசோ,அஞ்சலோ என்று பேச ஆரம்பித்தார் ரவிவர்மாவின் ஓவியங்கள் பற்றிப் பேசினார்,எம்.எப்ஹுசைனின் ஓவியங்களில் தனக்கிருக்கும் விமர்சனத்தைச் சொன்னார் எனக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டார் நான் குறிப்பாக இவர் என்று இல்லை எல்லா ஓவியர்களையும் பிடிக்கும் என்றேன்.<br /><br />அவரும் விடாக் கண்டனாக ஓவியங்களின் சில முறைகளைச் சொல்லி அவற்றுள் எது பிடிக்கும் என்றார்.நான் திரும்பவும் எனக்கு இவைதான் என்றில்லை எல்லாமே பிடிக்கும் என்றேன் நீங்கள் சொல்லுறபடி பார்த்தால் யாருக்குத்தான் ஓவியம் பிடிக்காது என்ற அவரது கேள்வியில் நிர்வாணமானதொரு உணர்வு வந்தது.<br /><br />அவருக்கு ஓவியம் பிடிக்கும் என்று சொல்லாமல் விட்டிருக்கலாம் ஆனால் எனக்கு ஓவியம் பிடித்திருக்கிறதே எப்படிச் சொல்லாமல் விடுவேன் அவற்றைப் பார்க்கப் பிடித்திருக்கிறது நாம் பார்க்கும் கோணத்திலிருந்து வேறுபடும் கோணம் பிடித்திருக்கிறது.இதை அவரிடம் சொன்னால் என்னைப் பைத்தியம் என்று நினைத்தாலும் நினைக்கலாம் அவரைப் பொறுத்தவரை ஒன்றை ரசிப்பதற்கு அதைப் பற்றித் தெரிந்திருக்கவேண்டும் என்னைப் பொறுத்தவரை ஒன்றை ரசிப்பதற்கு ஒன்றுமே தெரிந்திருக்கத் தேவையில்லை.<br /><br />பாமரத் தன்மைதான் ரசிகனின் முதன்மையான அடிப்படைத் தகுதியென்பேன் நான்.நிர்ர்சலனமான மூளையின் பரப்புகளில் ஒரு படைப்போ,பாட்டோ,இயற்கையின் ஒரு எழிற்கோலமோ ஏற்படுத்தும் அதிர்வுதான் உண்மையான ரசிப்பு.<br />மற்றவையெல்லாம் செயற்கையான திணிப்பு அல்லது போலச் செய்தல்கள் தான்.<br />இவற்றுள் பல அந்தஸ்து கருதி நாம் ஏற்படுத்திக் கொண்ட பழக்கங்கள் தான்.<br /><br />சில நேரங்களில் நான் இவ்வாறு நிர்வாணமாக நிற்க நேரிடுகிறதென்றால் பலநேரங்களில் பலர் எனக்கு முன்னால் அவ்வாறு நிர்வாணமாவதைப் பார்க்க நேரிடுகிறது.எனக்கு இசை பிடிக்குமென்று சொன்னால் இசையைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார் ஒருவர்.கலைப்படங்கள் பிடிக்குமென்றால் தான் முந்தாநேற்றுப் பார்த்த படம் ஒன்றைப் பற்றி தப்பும் தவறுமாகச் சொல்ல ஆரம்பிக்கிறார் ஒருவர்.<br /><br />இது மிகச் சங்கடமானதொன்று.ஆனால் எம்முடைய உளவியல் நூல்களோ ஒருவருக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து அவரை அணுகுங்கள் என்கின்றன.<br /><br />என்னை மாதிரி முற்றாக குழப்பமான ரசனை உள்ளவர்களுக்கு(முற்றாகக் கழண்டதென்றும் சொல்லலாம்)இது எந்தளவு பலனளிக்கும் என்று தெரியவில்லை<br /><br /><br />உங்களுக்கு என்ன பிடிக்கும்?இந்தக் கேள்வியையே கேட்டிராவிட்டால் இருவருக்கும் பொதுவானதொரு ரசனைப் புள்ளியை நாமாகவே விரைவில் கண்டடைந்துவிடுவோமென்று தோன்றுகிறதுIIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-13834718.post-1162315369363978922006-10-31T09:07:00.000-08:002006-11-02T01:46:12.190-08:00பறைநகரத்தின் மத்தியிலிருக்கும் அந்தப் பெருங்கோவிலிருந்து துந்துபி முழங்குகிறது கூடவே சங்கு சேகண்டியின் ஓசையும்.பக்தர் கூட்டம் இறை பூசை காணும் பெருவிருப்பில் சாரை சாரையாகக் கோவிலுள் நுழைகிறது.நுழைந்தவர்களை கோபுர வாசலில் கையில் பறை வாத்தியத்துடன் நந்தியின் உருவச்சிலை எதிர்கொள்கிறது நந்தியை வணங்கி நாதன் இருக்குமிடம் போகிறார்கள்.<br /><br />யாகசாலையின் ஓரத்தில் பெரியதொரு பறையை தலையில் உருமாவும் உடம்பெங்கும் நீறும் அணிந்த ஒருவர் முழக்கிக் கொண்டிருக்கிறார்.சிவனுக்கு மிகவும் பிடித்த டமருகம் என்னும் பறையை சிலர் முழக்குகிறார்கள்.யாகசாலையைச் சுற்றி பல்வேறு வகையான பறைகளின் முழக்கம் கேட்டவண்ணம் உள்ளது கூடவே யாழ்,சங்கு,குழல் போன்றவையும் அணிசேர்க்கின்றன.யாகத்தின் முடிவில் தத்தமக்கு அளிக்கப்பட்ட மரியாதைப் பொருட்களுடன் வீடு போகிறார்கள் பறை வாசித்த இசைக்கலைஞர்கள்.<br /><br />*<br /><br />பறை இந்திய சங்கீதத்தில் அவநத்த வாத்தியம் என்றழைக்கப்படுகிறது.ஸ்வாதி என்னும் முனிவர் விஸ்வகர்மாவின் துணையுடன் முதன் முதலில் பறைகளை நிர்மாணித்ததாகக் கூறப்படுகிறது.தமிழில் சொல்தல் என்பதனை அர்த்தப்படுத்தி பறை என்னும் பெயர் பிறந்தது.<br /><br />வேதகாலச் சடங்குகளில் துந்துபி என்னும் பறை முக்கிய இடம்பெற்றிருக்கிறது.நடனமாடும் சிவன் நடனத்திற்கு லயம் சேர்க்கும்படி டமருகம் என்னும் சிறுபறையை(உடுக்கை)ஒலிக்கிறார்.அதன் ஒலியிலிருந்தே மொழியையும் இசையையும் குறிக்கும் சகல சுரங்களும் தோன்றின என்கிறது தந்திர சாஸ்திரம்.பூதகணங்கள் பல்வேறு பறைகளை ஒலிக்க நந்திதேவர் மிருதங்கம் என்னும் பறையை வாசிக்க சிவன் ஆனந்த நடமாடுவார் என்கிறது வேதம்.<br /><br />**<br /><br />இளவேனிற் காலத்தின் ஒருபொழுது.அறுவடை முடிந்த வயல்வெளியில் முன்னிலாவின் மங்கிய வெளிச்சத்தில் உட்கார்ந்திருக்கும் மருதநிலப் பெண்கள் தெரிகிறார்கள்.கிட்டே நெருங்கி வருகிறான்.கிட்டே நெருங்கும்போதே பெருமுழவை கைகளால் முழக்கும் சத்தம் கேட்கிறது கூடவே தண்ணுமையின் சங் சங் என்னும் சத்தமும்.உழவன் மகளிர் வட்டமாக உட்கார்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள்.வளைக்கரங்கள் முழவின் மீது சீரான தாளகதியில் தட்டிக்கொண்டிருக்கின்றன.இரு பெண்கள் துடி என்னும் சிறுபறையை ஒலிக்கிறார்கள்.சற்றே எட்டத்தில் நெருப்பின் சுவாலை தெரிகிறது.ஆண்கள் கூட்டமாக உட்கார்ந்து கள் அருந்திக்கொண்டிருக்கிறார்கள்.<br /><br />கூடவே பாணர்கள் யாழ்களை மீட்டியும் தண்ணூமை என்னும் பறையை ஒலித்தும் பாடிக்கொண்டிருந்தார்கள்.சற்றுத் தள்ளி சிறு குழுவொன்றின் மத்தியில் தேவராளனும் தேவராட்டியும் சிறுபறைகளைத் தட்டிப் பாடியவாறே குறி சொல்லிக்கொண்டிருந்தார்கள்<br /><br />***<br /><br />தொல்காப்பியம் பழந்தமிழர் வாழ்வியலின் கருப்பொருட்களாக தெய்வம்,மரம்,பண்,யாழ் இவற்றோடு பறையையும் ஒன்றாகக் குறிப்பிடுகிறது நால்வகை நிலப்பிரிப்புகளான குறிஞ்சி,நெய்தல்,மருதம்,முல்லை ஆகியவற்றுக்கு உரியனவாக தனித்தனி பண்,யாழ்,பறை என்பன குறிப்பிடப்படுகின்றன.<br /><br />சங்க கால தமிழர் வாழ்வில் பறை முக்கிய இடம்பெற்றதற்கு அகநானூறு,புறநானூறு,நற்றிணை,ஐங்குறுநூறு,கலித்தொகை,பரிபாடல்,குறுந்தொகை ஆகிய சங்க இலக்கியங்களில் சான்றுகள் காணப்படுகின்றன.பறையின் பல்வேறு வகைகளான உடுக்கை,மதாரி,முழவு,தண்ணுமை,துடி போன்றவை சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகின்றன.இவற்றை எந்தவித வேறுபாடுமின்றி சமூகத்தின் பல்வேறு மக்களும் வாசித்துள்ளார்கள்.குழந்தை பிறந்த செய்தி பறை மூலம் அறிவிக்கப்பட்டது.திருமணம் பறையொலியோடு நடந்தது.பிண ஊர்வலம் பறையொலியோடு போனது.<br /><br />****<br /><br />சோழன் அரண்மனை வாசல்.ராணியும் தோழிகளும் ஆரத்தித் தட்டுடனும் வாகை மாலைகளுடனும் வாசலில் நிற்கிறார்கள்.கொம்பன் யானையொன்று முரசொன்றை அம்பாரியில் தாங்கியவாறு அசைந்தாடி வருகிறது.முரசுடன் கூடவே அதை அறைபவனும் அமர்ந்திருக்கிறான்.அரசியும் தோழிகளும் நிற்குமிடத்திற்கு வந்தவுடன் யானை மண்டியிடுகிறது.ஆரத்தி சுற்றப்பட்டு செம்பஞ்சுக் குழம்பு பொட்டாக முரசுக்கு சாற்றப்படுகிறது முரசறைபவனுக்கும் உரிய மரியாதைகள் வழங்கப்படுகின்றன.யானை எழுந்து படைவரிசைகளின் முன்னே செல்கிறது எக்காளங்கள் முழங்க படை அணிவகுத்து பல்லவ நாட்டை நோக்கிப் போகிறது.அந்தப் பேரிகைதான் சோழனின் வெற்றியை அறிவிக்கும் முதற்கருவி.<br /><br />*****<br />அரசுக்கட்டிலுக்கு இணையாக முரசுக் கட்டில் அமைத்து அதிலே வெற்றிமுரசத்தை இருத்தியது தமிழ் மன்னர் வரலாறு.முரசுக்கு பூசைகள் முதல் பலிகள் வரை வழங்கப்பட்டிருக்கின்றன.முரசுக் கட்டிலில் யாராவது அமர்ந்தால் கொலைத் தண்டனைக்குரிய குற்றம் என்றிருக்க தமிழ்பாடும் புலவன் களைப்பால் தூங்க அரசன் சாமரை வீசியது வரலாறு.அரச ஆணை முதல் மங்கல,அமங்கலச் செய்திகள் வரை பறையறைவோனால் மக்களுக்குச் சொல்லப்பட்டன.பறையறைவோன் மக்களிடையே ராசாவின் பிரதிநிதியாய்த் தோற்றமளித்தான்.<br /><br />******<br />மாவிட்டபுரம் கோவில் திருவிழா,உள்வீதியில் உதயசங்கர் குழுவினரின் தவில் முழங்க சுவாமி ஊர்வலம் போனது.காலங்காலமாக பின்பற்றப்படும் நடைமுறை என்று சொல்லி வெளிவீதிக்கும் வெளிவீதியில் உள்ள முதலி மர நிழலில் உட்கார்ந்து பறையொலித்துக் கொண்டிருந்தார்கள் ஒரு குழுவினர்.பறையனும் பறையும் கோவில் உள்ளே போகக்கூடாதாம் சாமிக்கு தீட்டுப் பட்டுவிடுமாம்.வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிய பரமசிவன் மகனுக்கு பறை ஆகாது உவங்கள் விசயம் தெரியாமல் கோவில்லை வந்து பறையடிக்கிறாங்கள்.ஊர்ப்பெரியவர் புறுபுறுத்துக் கொண்டிருந்தார்.<br /><br />*******<br /><br />தினைப்புலம்.குறமகள் வள்ளி சிறுபறை அடித்து சோ சோவெனப் பாடிக்கொண்டிருக்கிறாள்.சாதிக்கார முருகன் இல்லாத பொல்லாத விளையாட்டெல்லாம் காட்டி அவளை மயக்க முயன்றுகொண்டிருந்தார்.<br /><br />********<br /><br />செல்வச் சந்நதி கோவில் திருவிழா. சந்நதிக்கு எதிரே உரிமையுடன் நின்று பறைமேளச் சமா வைக்கிறது ஒரு குழு சுன்னாகத்திலிருந்து வந்தவர்களாம்.தங்கடை வீட்டுப் பெண் என்ற உரிமையில் வள்ளியின் கோவிலுக்கு எதிரே கொட்டி முழக்குகிறார்கள்.கோவிலைச் சுற்றி பல்வேறு வகையான பறைகள் முழங்கிக்கொண்டிருக்கின்றன.காவடியாட்டமும் பறையொலியும் ஒன்றையொன்று முந்த முயல்கின்றன.குரவையாட்டத்தின் கனவில் பாதிக் கண்மூடிப் பார்த்துக்கொண்டிருந்தார் குறிஞ்சிக் கடவுள்.<br /><br /><br />**********<br />சுன்னாகத்திலிருந்து வந்த குழு கால்நடையாகத் திரும்பிப் போயிற்று.பறையுடன் இவர்களை ஏற்ற பேரூந்திலிருந்தவர்கள் அனுமதிக்கவில்லையாம்.கோவிலுக்குப் போய்வரும் வழியில் எதுக்கு தீட்டுச் சாமனில் தொடுவான் என்று அருவருத்தார்களாம்.அவர்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தது அளவெட்டி தவில்க் கலைஞர்களை ஏற்றிய கார்.<br /><br />************<br /><br />மதுரையில் ஒரு குக்கிராமம் ஊர்ப் பெரிய மனிதர் சாவீடு.சற்றுத் தாமதமாக வந்ததற்காக அடிவிழுந்து கன்றிப்போன தோளில் பறையின் வார் அழுந்த எரிந்தது.அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் வாசித்துக்கொண்டிருந்தார்கள் தந்தையும் மகனும்.பக்கத்தில் தப்புகளை நெருப்பில் காய்ச்சிக் கொண்டிருந்தனர் தப்பாட்டக்காரர்கள்.செயலில் அவசரம் தெரிந்தது யாருக்குத் தான் அடி வாங்க ஆசை.<br /><br />**************<br /><br />லொஸ் ஏஞ்சலில் ஆனந்தன் சிவமணியின் இசை நிகழ்ச்சியொன்று.பல்வேறு பறைகளைப் பரப்பி வைத்து வாசித்துக் கொண்டிருந்தார் பெர்குசன் வாத்தியமென்று இந்திய அமெரிக்கப் பாகுபாடின்றி தலையாட்டி ரசித்தார்கள்.ஒவ்வொரு வகையான பறைகளையும் வாசித்து விட்டு இறுதியாக சாவுக்கூத்து என அழைக்கப்படும் சாவீட்டுப் பறை இசையை வாசித்தார்.அரங்கமே எழுந்து நின்று ஆடியது.முடிந்தவுடன் அவரிடம் கையெழுத்து வாங்க முண்டியடித்தது.<br /><br />******************<br /><br />எட்டயபுரம்.<br />கோவில் வீதி வழியாக "ஊருக்கு நல்லது சொல்வேன்.எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்.அன்பென்று கொட்டு முரசே உலகில் அத்தனை பேரும் சமமாம்" என்று முண்டாசு கட்டிய ஒருவன் பாடிக்கொண்டு போனான்.<br /><br />*********************<br />கோவில் யானை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்ததுIIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-13834718.post-1161795447024269022006-10-25T09:22:00.000-07:002006-10-27T07:15:37.206-07:00இரவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்நேற்று இரவு மழை பெய்தது.<br /><br />இதைப் படிக்கும்போது உங்களுக்குச் சிரிப்பு வரலாம்.அதுவும் இந்தியாவின் சீராபுஞ்சியிலோ இலங்கையின் வட்டவளையிலோ இருப்பவர்களுக்குக் கோபம்கூட வரலாம்.மழை பெய்வது அதுவும் நேற்று இரவு பெய்வது பெரிய விடயமா என்ன?காயப்போட்ட படுக்கை விரிப்புகள் பற்றிய நினைவு இருந்திருக்காவிட்டால் எனக்குக் கூட அது பெரிதாகத் தோன்றியிருக்காதுதான்<br /><br />எனக்கு சங்கீதம் தெரியாது.<br />பூசினாற்போன்ற நல்ல வெளிச்சம்<br />நிரம்பிய அந்த வீட்டின்<br />மேஜையில் வயலின் இருந்தது<br />படுக்கை வசத்தில்<br />எத்தனை பேருக்கு வயலினையும் வில்லையும்<br />தொடுகிற தூரத்தில் பார்க்க வாய்த்தது<br />வயலினின் நிறமோ அற்புதம்<br />இசை புழங்கிய வழவழப்பு<br />எல்ல இடத்திலும்<br />தப்பித் தவறி வந்து<br />ஊர்ந்துகொண்டிருக்கிறது<br />வயலின் நரம்புகலில்<br />மேல்நோக்கி ஒரு சிற்றெறும்பு.<br />வாய் குவித்து ஊதத் தயக்கம்<br />விரலால் அப்புறப்படுத்தவும்.<br />என் செயல்கள் உண்டாக்கக்கூடிய<br />இசைக் கேடுகளை விட<br />எறும்பு ஊர்வது ஒரு ராகத்தின்<br />மேல்தானே<br /><br />*கல்யாண்ஜி கவிதைகள் தொகுப்பிலிருந்து*<br /><br />கல்யாண்ஜியின் வயலினில் ஊர்ந்த எறும்பு இராகத்தின் மேல் ஊர்ந்ததென்றால் எனது அடுக்குமாடி அறையின் ஜன்னலின் வெளியே கைக்கெட்டும் தூரத்தில் பெய்து கொண்டிருந்த மழை இசைக்குறிப்புகளை எழுதிவிட்டுப் போயிருந்தது.<br /><br />பிரேம் ரமேஷின் இரவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் மாதிரியிலான ஒன்றை இங்கே நீங்கள் எதிர்பார்த்தால் மன்னிக்க பொடியனின் ரசனைக்கு நீங்கள் தயாராகவில்லை.நீங்கள் எதற்கும் முன்னொரு காலத்தில் நூற்றியெட்டுப் பொடியன் கள் இருந்தார்கள் கதையை வாசிப்பது நல்லது.<br /><br />கதனகுதூகலம் என்ற ராகத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?ரகுவம்சசுதா என்ற பாடலை?கல்கத்தா படத்திலை நமது நகரம்தான் கல்கத்தாபுரி என்று ஒரு பாடல் வருமே அட இப்ப விளங்குதா?கதன குதூகல ராகத்தை நினைவுபடுத்த முடியாதவர்கள் கல்கத்தா பாடலை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.(<a href="http://www.musicindiaonline.com/s?i=3&q=raguvamsasudha&s=1">ரகும்வச சுதா பாடலை கேட்கவிரும்புபவர்களுக்கு</a>)<br /><br />மோகனம்,கல்யாணி என்று பிரபலமான ராகங்களை விடவும் எந்தவொரு இசைக்கருவிக்கும் எந்தவொரு பாடகருக்கும் பொருந்திப் போகக்கூடிய ராகம் இந்தக் கதனகுதூகலம்.அதனை வாசிக்கும்போது பெயரில் இருக்கும் குதூகலம் நம்மையும் தொற்றிக்கொள்வது தான் இந்த ராகத்தின் சிறப்பு<br /><br />வெளியே மழை ஸ்ஸ்ஸ்ஸென்ற இரைச்சலுடன் பெய்துகொண்டிருக்கிறது.சுழன்றடிக்கும் காற்றில் தெறிக்கும் மழைச்சாரல் படுவதும் நிற்பதுமாக விளையாடுகிறது காற்றின் குதூகலம் என்னையும் தொற்றிக்கொள்கிறது காற்றின் வருடலுக்கு எந்த வாத்தியம் பொருத்தமாக இருக்கும்?ம்ம் வயலின்? ம்ம் வயலின் நன்றாக இருக்கும் இசைத்தட்டை சுழலவிடுகிறேன்.குன்னக்குடியின் வயலினில் மழைச்சாரலாய்த்<br /> தெறிக்கிறது ரகுவம்சசுதா <br /><br />ஸாரிமகாரிசரிமமதாதநிககபசாசநிதபம ஸ்வரங்கள் வெளியே தெறிக்கின்றன மழைத்துளி உள்ளே தெறிக்கிறது.ஜன்னலில் முகம் பதிய முகத்தில் வந்து அறைகிறது ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு ஸ்வரமாய்.வில்லில் அம்பின் ஒவ்வொரு இழுப்புக்கும் என்னுடலின் உள்ளே ஒவ்வொரு நரம்பு அதிர்கிறது.மொத்தம் எத்தனை நரம்பு உடம்பில்?என்னென்ன சுரங்கள் எங்கே அதிர்கின்றன.இதென்ன மேல்ஸ்தாயி சட்ஜமா?காந்தாரத்திற்கு இந்த நரம்பா?<br />வாசிப்பது குன்னக்குடியா இல்லை மழையா?மழைதான் ஜன்னல் கம்பிகளில் யாழ் மீட்டுகிறதா?அதென்ன ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸென்று ஒரே ஸ் வரிசையில் கொட்டுகிறதே?மற்ற ஸ்வரங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு.<br /><br />ஆச்சு இதோ முடிஞ்சுது கரகோசத்தின் மத்தியில் குன்னக்குடி அடுத்த பாடலுக்குப் போகிறார்.வேண்டாம் அடுத்த பாடல் வேண்டாம் கதன குதூகலம்தான் வேண்டும். அடுத்தது என்ன புல்லாங்குழல்? ம் அதுதான் சரி ஜன்னல் கம்பிகளில் வயலின் வாசித்த காற்று இப்போது கம்பிகளின் இடைவெளியால் புகுந்து வெளியேறி ஊ ஊ வென்று புல்லாங்குழலிசைக்கு முயற்சிக்கிறது.<br /><br />குன்னக்கூடி அலுமாரிக்குப் போக.என் ரமணி ஆரம்பிக்கிறார் எடுத்த எடுப்பிலேயே எந்தவித நீட்டல் முழக்கல் ஆலாபனை எதுவுமில்லாமாலேயே நேரே பாடல். ஜன்னல் கம்பிகளோடு புல்லாங்குழல் வாசித்த காற்று இப்போது ரமணியின் புல்லாங்குழலின் துளைகளில் நர்த்தனமாடுகிறது.அவர் நிறுத்தி ஆரம்பிக்கும் இடங்களில் காற்றுக்குப் பொறுமையில்லை பாம்பொன்றின் சீறலாக கீழ்ஸ்தாயி சட்ஜத்தில் இரைந்து மிரட்டுகிறது.இந்த மிரட்டலுக்கெல்லாமா புல்லாங்குழல் பணியும்? காற்றைப்பிடித்து வாயினால் ஊதி விரலினால் மூடி மடக்கி விரும்பிய துளையால் விரும்பியபடி வெளியேற்றி ரகுவம்சசுதாவை முடிக்கிறார் ரமணி.<br /><br />இதை சக்சபோனில் கேட்டால் எப்படியிருக்கும்?.கத்திரி கோபாலநாத்தின் பாடல்களில் தேடுகிறேன் கதனகுதூகல ராகத்தில் தில்லானா இருக்கிறது ரகுவம்சசுதா இல்லை.தன்னிசையாக எம்.எஸ்ஸின் இசைத்தட்டைப் போடுகிறது கை.எம்.எஸ்ஸின் குரலில் ரகுவம்சசுதா; கண்ணனுடன் விளையாட்டயர்ந்த ராதையின் குரலில் குதூகலம்.கன்ணா வெளியே மழை பெய்கிறது கோவர்த்தன மலையை கொஞ்சம் தள்ளி வைத்து விளையாட வாயேன் குரல் கெஞ்சுகிறது. வாயோ கண்ணனை மறந்து ராமனைப் பாடிக்கொண்டிருக்கிறது.கண்ணனா ராமனா?யாருக்கிங்கே வித்தியாசம் தெரியும் எம்.எஸ்ஸின் குரல்தந்த போதையில் மழை,மழை தந்த போதையில் நான்.<br /><br />வெளியே பளீரென்று அடித்த மின்னலுடன் காற்று வேகம் தணிந்து நின்றுபோய்விட்டது.இப்போது மழை தனது நர்த்தனத்தை ஆரம்பிக்கிறது.ஜன்னலின் கீழே நேரே உள்ள வீட்டின் முகட்டில் மழைத்துளிகளின் நர்த்தனம் சரியான வாத்தியம் எது தவில் நாதஸ்வரமா தபேலாவா.வேண்டாம் காற்று நின்ற நேரத்தில் காற்று வாத்தியம்.தபேலாவே சாலப்பொருத்தம். ஜாகீர் உசேனும் தபேலாவும் மழைக்குப் போட்டிக்கு கச்சேரி கட்டுகிறார்கள் போட்டிக்கு ஜலதரங்கம் வாசிக்கிறது மழை <br /><br />திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்<br />தீம் தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட-தீம்தரிகிட<br />பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்<br />பாயுது பாயுது பாயுது-தாம் தரிகிட<br />தக்கத் ததிங்கிடத் தித்தோம்-அண்டம் சாயுது சாயுது சாயுது<br /><br />இதென்ன தீன் தாளா? விளம்பித காலமா?தீம் தரிகிட தீம் தரிகிட தாம் தரிகிட தக்கத் ததிங்கிட<br /><br />இதென்ன சதி தபேலா சுதியுடன் போகும்போது?ஏன் இந்த மழை இப்படி ஓய்ந்துபோய்விட்டது?ஜாகீர் உசேனை மட்டும் தனி ஆவர்த்தனம் வாசிக்க விட்டு எங்கே போகிறது மழை?IIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-13834718.post-1160928065316349212006-10-15T08:44:00.000-07:002006-10-15T23:17:12.146-07:00சுரா என்னும் Stylistசமகாலத் தமிழிலக்கியப் பரப்பில் சுராவை முன்வைத்து தங்களை முற்செலுத்தியவர்கள் அனேகம்.சுராவைத் துதிபாடியவர்கள்.அவரை இலக்கிய/ஞானத் தந்தையாக ஏற்றுக்கொண்டவர்கள்.சுராவை விமர்சித்து ஏற்றுக்கொண்டவர்கள் சுராவை விமர்சிப்பதன் மூலமே தங்கள் இடத்தைத் தக்கவைக்க முயல்பவர்கள் என்ற பட்டியலின் ஓரத்தில் என்னைப் போன்ற சாதாரண வாசகர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இதை எழுதத் தூண்டுகிறது.<br /><br /> *-*-*<br />சுராவை விமர்சித்தே வளர்ந்தவர்கள் என்று நான் இருவரைக் கை காட்டுவேன்.ஒருவர் ஜெயமோகன் இன்னொருவர் சாருநிவேதிதா.இருவருடைய வளர்ச்சிக் கட்டத்திலும் சுரா ஏதோ ஒருவகையில் நேராகவோ எதிராகவோ தாக்கம் செலுத்தியிருக்கிறார்.சாருநிவேதிதா முதலில் போட்ட புத்தகமே ஜே.ஜே சில குறிப்புகள் சில விமர்சனங்கள் என்றுதான் நினைக்கிறேன்(சிறு கையேடு அளவில் இருக்கும் ஜே.ஜே என்ன சொல்ல வருகிறது என்று தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பியிருப்பார்)<br /> *-*-*<br /><br />இம்மாதக் காலச்சுவடு சுராவைப் பற்றிய மற்றவர்களின் நினைவஞ்சலிக் குறிப்புகளோடு விரிந்திருக்கிறது.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கோணத்தில் சுரா பிடித்திருக்கிறார்.சிறு குறிப்புகளாக வந்ததில் என்னைக் கவர்ந்தது ம.தி.சாந்தன் என்பவர் எழுதியிருந்த குறிப்பு.அவர் எழுதியிருந்தது என்னவோ வழமையான வார்த்தைகள்தான் ஆனால் அதில்லை விசேடம்.அவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட சின்னச் சாந்தன்.<br /><br />தனது தூக்குத் தண்டனைக்கெதிராக சுரா காலச்சுவட்டில் கையெழுத்து வேட்டை நடத்தியதையும் எழுத்தாளர்களைச் சேர்த்து குரல் கொடுத்ததையும் நினைவு கூர்ந்த அவர் தான் இன்று உயிருடன் இருப்பதற்கு சுராவும் ஒரு காரணம் என்கிறார்.அது மிகையில்லை<br /> *-*-*<br /><br />என்னைக் கவர்ந்தது சுரா என்னும் ஸ்டைலிஸ்ற் எழுத்து நடை,பேச்சு எல்லாவற்றிலும் தனக்கென்று ஒரு ஸ்டைலை வைத்திருந்தவர் சுரா. இன்றும் சுரா என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது ஒரு American Indian தாத்தாவின் பிம்பம்<br /><br />காலச்சுவட்டில் வந்த சுராவின் துதிபாடல்களை விட சுராவிற்கான முக்கிய அஞ்சலிக் குறிப்பாக நான் கருதுவது ஜெயமொகனின் நினைவின் நதியில் நூலைத்தான்.வாழ்வில் ஒருமுறையேனும் ஜெயமோகனைச் சந்திக்க நேர்ந்தால் இந்த நூலுக்கு "சுரா என் காதலன்" என்று ஏன் பெயர் வைக்கவில்லை என்றுதான் கேட்பேன்.அந்தளவுக்கு சுரா என்னும் மனிதன் மீது ஜெயமோகன் என்னும் மனிதன் கொண்ட காதலாக விரிந்திருக்கிறது புத்தகம்.<br /><br />அந்தப் புத்தகத்தை இரண்டே இரண்டு நாட்களில் எழுதித்தள்ளியதாக ஜெயமோகன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.நம்புவேன்.ஏனென்றால் காதலித்த ஒருவரின் பிரிவு எவ்வளவு மன அமைதியின்மையை ஏற்படுத்தக் கூடியதென்பது புரியும்<br /> *-*-*<br /><br />சுராவின் ஜே.ஜே சில குறிப்புகள் பற்றி மற்றவர்கள் சொல்லக் கேட்டு எனக்கேற்பட்டிருந்த படிமம் அதனைப் படித்தபோது குலைந்து போய்விட்டது.ஒருவேளை யார் வாயினும் கேட்காமல் நானே அந்த நூலைப் படித்திருந்தால் ஒருவேளை வித்தியாசமானதொரு எண்ணம் தோன்றியிருக்கலாம்.<br /><br />ஜேஜேயைப் படிக்குமுன்னரே ஆதவனின் காகித மலர்கள்,என் பெயர் ராமசேசன் இரண்டும் படித்திருந்தேன் இரண்டும் ஏற்படுத்திய தாக்கத்தின் பாதியைக் கூட ஜே.ஜே சிலகுறிப்புகள் ஏற்படுத்தவில்லை.ஜே.ஜே சொல்வது ஒரு அறிவுஜீவியின் அறிவுஜீவியாக வாழ்வதற்குரிய போராட்டம்.ஆதவனின் கதைகள் சராசரி இளைஞனின் போராட்டம் இரண்டினதும் தளங்கள் வேறு ஆனாலும் இரண்டும் கட்டமைத்த/அல்லது கட்டுடைத்த நவீனத்துவ மனம் ஒன்றே அந்த வகையில் ராமசேசன் ஜேஜேயைவிட நவீனத்துவவாதி எனலாம் ஆனாலும் ஜேஜே எழுத்தாளனாச்சே அதனாலன்றோ பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியரெல்லோரும் நவீன படைப்பாளி எண்டவுடனே தங்களை ஜேஜேயில் அடையாளம் காணத் துவங்கி விடுகிறார்கள்<br /><br />ஆனால் 90 களில் அந்த நூலைப் படித்துவிட்டு அதன் நவீனத்துவத்திலுள்ள போதாமைகளை விமர்சிப்பது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது-இதனாற்றான் ஜேஜே சில குறிப்புகளை விமர்சிப்பதை என்னளவில் தவிர்த்து வருகிறேன் இல்லையெனில் ஜே சிலகுறிப்புகளை விரித்து வைத்து அதைத் தாண்டியவன் தான் நவீனத்துவ வாசகன்/படைப்பாளி,விமர்சகன் இன்னோரன்ன இதுகள் என்ற கோட்பாட்டுக்குள் சிக்கிய மட்டை கட்டிய மாடுகளில் நானும் ஒருவனாகிவிடுவேனென்ற பயம்தான் காரணம்.<br /><br /> வெளிவந்த காலப்பகுதியில் ஜேஜே மிகச் சிறந்த ஒருநாவல்தான் சந்தேகமே இல்லை அதேபோன்று அது ஏற்படுத்திய கட்டுடைப்பும் நவீனத்துவத்தின் தாக்கமும் தமிழ்ச் சூழலுக்குப் புதியவைதான் அந்த நோக்கில் அந்தப் புத்தகத்தை யாராவது விமர்சித்தால் படிக்கலாம்.<br /><br />இதே இடத்தில் சிறுகதையாக எழுதவேண்டியதை தட்டி நிமிர்த்தி நாவலாக்கிவிட்டார் சுரா என்றும் சில விமர்சனங்கள் வாசிக்கிறேன்.சிரிப்பு வருகிறது ஜெயமோகன் போன்றவர்களால் எந்தவொரு சிறுகதையையும் நாவலாக்கிவிட முடியும்.நாவல்களை சிறுகதையாக்கிவிட முடியும் ஜெயமோகனின் டார்த்தீனியம்,மாடன் மோட்சம் நாவல் வகைக்குரியவை ஆனாலும் சிறுகதையாக அவற்றை வாசிக்கும்போது இடறுவதில்லையல்லவா அதேபோன்றதுதான் ஜேஜேயின் வடிவம் அதனைச் சிறுகதையாக்கினால் அந்த நாவலின் மையநாடியான ஜேஜேயின் கடிதங்களை கத்தரிக்கவேண்டி இருந்திருக்கும் பிறகெங்கே அது சிறுகதை ஆனந்தவிகடனில் வரும் நாலுவரிக்கதையல்லவா<br /><br />ஜே.ஜே சில குறிப்புகளை மீள எழுத முயன்று வெற்றி தோல்வி கண்ட சில நாவல்கள்/சிறுகதைகளைக் குறிப்பிடலாம்.அண்மையில் வந்த எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி ஜேஜேயின் இரண்டாம் பாகம் எனச் சொல்லலாம் எழுத்தாளன் சம்பத்தின் அகால மரணம் ஏற்படுத்திய தாக்கம் உறுபசி நாவல் மீது அரூபமாகப் படிந்திருக்கிறது.காரணம் கதையின் மையப்பாத்திரம்(அப்படி ஒன்று உண்டா சிதறுண்ட கதையென்று சொல்கிறார்களே)சம்பத் என்னும் ஒருவன் அவனை எங்களால் இறந்துபோன சம்பத்துடன் தொடர்புபடுத்த முடிவதே அந்த அரூப சுவாரசியத்திற்குக் காரணம்.மற்றும்படி அந்த வடிவம் தமிழ் இலக்கியச் சூழலில் நன்கு பழகிவிட்டதால் பெரிதான தாக்கமெதையும் உறுபசி ஏற்படுத்தவில்லை.<br /><br />ஜேஜெயை விட சுராவின் புளியமரத்தின் கதையும் அதேயளவுக்கு/அதைவிட குழந்தைகள் பெண்கள் ஆண்களும் பிடித்திருக்கின்றன.புளியமரத்தின் கதையில்தான் சுரா என்னும் ஸ்டைலிஸ்ற் வெளிப்படுகிறார் என்கிறேன் நான் அவரது பல்லக்குத் தூக்கிகள்,ரத்னாபாயின் ஆங்கிலம்,பிரசாதம் போன்ற சிறுகதைகளில் தெறிக்கும் அங்கதம்,எள்ளல்,நையாண்டியை விட அதிகமாக புளிய மரத்தின் கதையில் வெளிப்பட்டுள்ளது என்பேன்.<br /><br />குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலே இல்லையென்று ஜெயமோகன் நிராகரிப்பதுபோன்று என்னால் நிராகரிக்க முடியவில்லை.ஜேஜேயுடன் ஜெயமோகனின் தேவை தீர்ந்துவிட்டது என நினைக்கிறேன் என்னால் அப்படி நினைக்க முடியவில்லை.குழந்தைகள் பெண்கள் ஆண்களில் தான் சுரா கொஞ்சமாவது உயிர்ப்புடன் வெளிப்படுகிறார் என்பது எனது வாதம்<br /><br />சுராவின் கவியுலகம் பற்றிப் பின்னொரு நேரம் பார்க்கலாம்.நாவல்களில் கட்டிறுக்கிய மொழியின் வீரியமான வெளிப்பாடு சுராவின் கவிதைகளில் உண்டு.<br /><br />சுரா போன்றதொரு ஸ்டைலிஸ்றின் மறைவு என்னைப்போன்ற பொடியனை நிறையவே உலுக்கிவிடுகிறது.இயல்பாகவே தேர்ந்தெடுத்து ரசிக்க விரும்புவது இந்தப் பொடியனின் இயல்பு அது ஜேஜேஎன்னும் அறிவுஜீவியை விட இன்னொரு ஸ்டைலிஸ்றை அல்லது இசை,இயல்,இலக்கியம்,மதுவென்று தேர்ந்து அதில் மூழ்கும் ஒரு ரசனாவாதியை ஏன் சுரா படைக்காமற் போனார் என்று கேள்வி கேட்கிறது.<br /><br />அதற்குப் பதிலாய் லெதர் பாரில் பீர் அடிப்பதாய் அள்ளி விடுபவற்றையும் கூகிள் குடிகாரரின் ரசனையையுமல்லவா நான் வாசிக்கவேண்டியிருக்கிறதுIIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-13834718.post-1160834654133327032006-10-14T06:37:00.000-07:002006-10-27T08:59:09.576-07:00ஸ்குரூடிரைவர்தமிழ் வலையுலகில் மெல்லத் தவழ்கையில் கண்ணில் பட்டார் <a href="http://tamilbar.blogspot.com">தமிழ் பார்டென்டர்</a>.சரிதான் என்னுடைய இச்சையை இங்கே தீர்க்கலாம் தீர்த்தம் பருகலாம் என்று போனால் அடிப்படையே தப்பாக இருக்கிறதே.<br /><br />பார்ட்டென்டரின் வேலை என்ன?பாரில் வருபவர்களுக்குத் தீர்த்தம் தெளிப்பது.ஆனால் இந்த பார்ட்டென்டரோ வருபவர்க்கெதுவும் மிச்சமின்றி தீர்த்தம் அத்தனையையும் தானே பருகிவிடுவார் போலிருக்கிறது.போதாக்குறைக்கு வேலையில்லாதவன் என்று பக்கவிவாதம் வேறு.<br />அண்ணே அடிப்படையே தப்பண்ணே ஒரு ஸ்குரூடிரைவர் கலக்குவது எப்படியென்று தெரியாத நீங்கள் எல்லாம் என்னைப்போன்ற ரசனைவாதிகளுக்கு தாளாத மனவருத்தத்தையும் தீராத தேசியவியாதியையும் ஏற்படுத்திவிடுவீர்கள் போலிருக்கிறதே.<br /><br />கில்லியிலிருந்து ஒரு அன்பர் வாங்க வாங்க ஸ்பைசியாய்த் தாங்க என்றிருக்கிறார்.என்றைக்கும் ஒரு பெடியனின் கொள்கை எல்லோரும் இன்புற்றிருக்கவன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே என்பதுதான்.<br /><br />இதோ ஸ்பைசியாய் கொஞ்சம் ஸ்குரூடிரைவர்.<br /><br />ஸ்குரூடிரைவர் ஒரு மிக்ஸ் பெயரைக் கேட்டதும் பயந்துவிடாதீர்கள்.மேலை நாடுகளில் இது பெட்டைகளின் பிரிய பானம்.இதிலும் பெட்டைப் பானம் பெடியன் பானமா என்று பெண்ணியவாதிகள் கிளம்பிவிடாதீர்கள் பிறகு நான் உங்களோடை கதைக்கிறதுக்கு லோங் ஐலண்ட் ரீ தான் குடிக்கவேணும்.<br /><br />கொஞ்சம் வொட்கா,நிறைய தோடம்பழச் சாறு ரெண்டும் சேர்ந்தால் சந்திரலேகா அடச்சே ஸ்குரூடிரைவர்.நிறைய வொட்கா கொஞ்சம் தோடம்ப்ழச் சாறு ரெண்டும் சேர்ந்தால் அதுக்குப் பேர் அமரர் ஊர்தி டிரைவர்.<br /><br />வெளியிலிருந்து பார்த்தால் அசல் தோடம்பழச் சாறுதான்.ஆகவே எங்கேயாவது விருந்தில் தோடம்பழச் சாறு அருந்தும் ஆண்கள் பெண்கள் அனைவரையும் சந்தேகப்படுங்கள்.<br /><br />இந்த வொட்கா இருக்கே வொட்கா என்ன கவித்துவமான பெயர்.மார்க்சியம்,ரஷ்ய இலக்கியங்களுக்கு அடுத்தபடியாய் ரஷ்யாவிலிருந்து நான் பெற்றுக்கொண்டது வொட்காதான்.ஒரு கையில் வொட்கா இன்னொரு கையில் புஷ்கின்,அகமதோவா கவிதைகள் என்று கலந்து பருகிய நாட்கள் நாலைந்து வருடம் முன் தானென்றாலும் மங்கலாய்த் தான் தெரிகிறது.<br /><br />வொட்காவுக்கு Tonic,Lime என்று பல மிக்ஸ் இருந்தாலும் என்னுடைய சொய்ஸ் ஸ்குரூடிரைவர்தான்.வொட்காவின் மிதமான நாக்கை அள்ளும் எரிவு,தோடஞ்சாறின் புளிப்பு இரண்டையும் சரியாகக் கலப்பதற்கு நல்லதொரு பார்டென்டர் இருந்தால் அன்று சொர்க்கம் அருகிலே<br /><br />வொட்கா என்னும் பெயரே கொஞ்சமாக வொல்காவை ஞாபகப்படுத்துகிறதல்லவா.ஒரு கலாசாரத்தின் பிறப்பிடமல்லவா அது ?தனிப்பனைக் கள்ளிலிருந்து வொட்காவரை என்று எனது கலாச்சார நெடும்பயணத்தின் மைல்க் கற்களை எழுதிவைக்க விருப்பம்தான் பார்ப்போம்.<br /><br />போலந்தின் Evolution ஐயும் ஸ்வீடனின் Absolut ஐயும் ரஷ்யாவின் ருஷ்காயாவையும் ஒருமுறையாவது காணாத கண்ணென்ன கண்ணே<br /><a href="http://en.wikipedia.org/wiki/Vodka">இங்கே போய் காண்க</a>IIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-13834718.post-1160827172923566512006-10-14T04:56:00.000-07:002006-10-14T11:51:12.236-07:00இசங்கள் பாதி இச்சைகள் பாதி கலந்து செய்த மனிதன் நான்தமிழில் எழுதத் தெரிந்தவர்களெல்லாம் எழுத ஆசைப்படும் பத்தியை நானுமெழுத வந்தேன்.ஏற்கனவே இருக்கும் முகமூடிகளுக்குப் போட்டியுமல்ல இங்கே பத்தியெழுதும் பெட்டைக்குப் போட்டியுமல்ல.<br /><br />பின்னவீனத்துவம்,முற்போக்கு,மார்க்சியம்.ட்ரொஸ்கீயம்,தமிழ்த்தேசியம்,<br />பேரினவாதம்,பாசிசம்,இருத்தலியம்,எக்சிடென்சியலிசம்,சேடிசம்,மசாக்கிசம்,மாந்திரீக யதார்த்தவாதம்,பெண்ணியம்,ஆணாதிக்கம்.கற்பு,கறுப்பு,ஆண்மை,பெண்மைகற்பிதங்கள்,<br />உலோகாயுதம்,ரியலிசம்,நியோ ரியலிசம்,ஸ்டாலினசம்,இந்துத்வா,இஸ்லாமிய அடிப்படைவாதம்,தீவிரவாதம்,பயங்கரவாதம்என்று அரசியல்,சமூக,இலக்கியங்களில் நிலவும் அத்தனை நடப்புக்கும் ஒவ்வொரு பெயர் சொல்லுறாங்களே ஈதெல்லாம் என்னவாக இருக்கும் என்று பூராய ஆரம்பித்த பதிவு.<br /><br />பூராயப் பூராய இசங்களாகவும் வாதங்களாகவும் விரிந்துகொண்டிருக்கும் உலகில் தனியொருவனாகத் தத்தளித்து பின் அதுவே இன்னொரு வாதமாகவோ இசமாகவோ போய்விடலாமென மனம் தேறி ஆரயப் புறப்பட்டு வாதங்களில் பலனின்றி பக்க வாதத்திலும் பாரிச வாதத்திலும் உழன்று.தக்கதொரு இடமாய் தமிழ்மணத்தைக் கண்டின்புற்றீங்கு வந்தேன்<br /><br /><br />இந்த உலகம் மனிதர்களால் நிரம்பியிருக்கிறது.மனிதர்களோ இசங்களாலும் வாதங்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.இவைகளோ மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.தானே உருவாக்கிய கடவுளை தானே தாள்பணிந்தாற்போல, இவைகளோ மனிதனை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிட்டன.<br /><br />தன்னைத் தானே சுற்றி இசங்களாலான கோடுகளையோ வட்டங்களையோ வரைந்துகொண்டு வழுவாமல் வாழ்வதற்கு முயற்சி செய்கிறான்.அந்த வட்டங்களில் சில சிறுவட்டங்கள் சில பெருவட்டங்கள்,சில நீள்வட்டங்கள் சில வட்டம்போற் தோன்றும் பரவளைவுகள் ஒவ்வொன்றின் இயல்புக்கேற்பவும் தன்னையும் சீரமைத்துக் கொள்வதிலும் இனங்காட்டிக் கொள்வதிலும் இந்த மனிதன் படும் பாடு இருக்கிறதே அம்மம்மா சொல்லி மாளாதது சொல்லில் எழுதாதது.<br /><br />தனது வட்டத்திற்குள் மற்றவனை இழுத்தல்.மாற்றானின் வட்டம் பக்கம் வரும்போதெல்லாம் தாவி அதனுள் கலத்தல்.தன்னுடைய வட்டத்தை வாதங்களால் நிலைநிறுத்தல்.நிறுத்த முடியாத போதெல்லாம்.இசங்களையும் வாதங்களையும் குறைசொல்லல்.ஒன்றுக்கு மாற்றாக இன்னொன்றைப் பிரச்சாரம் செய்தல் என்று காலம் முழுவதும் இசங்களுடனும் வாதங்களுடனும் ஓடுகிறது மனித வாழ்க்கை.இவர்கள் பலவட்டங்களாற் சூழப்பட்ட மையங்கள்<br /><br />கடவுள் கூட இந்த இசங்களின் முன்னைய வடிவம்தான் என்பது தெளிவு. ஈதெல்லாவற்றினதும் முடிபு ஆன்மீகம் எனச் செப்புவோர் கூட தாமிருப்பது இன்னோர் வட்டமே என்றுணர்வதில்லை.வெற்றானந்தப் பெருவெளியிற் சுற்றித் திளைப்பதாகப் பாவனை பண்ணுதல் மட்டுமே அவர்களால் முடிகிறது.வட்டங்கள் கோடுகளாலானவை<br /><br />இசங்கள் கொள்கைகள் என்றால் கொள்ளையிலே போன இச்சைகள் மட்டும் மனிதனை விட்டுவிடுகிறதா.இச்சைக்கும் கொள்கைக்கும் இழுபறிப்படுவதே மனித வாழ்வாகிப்போய்விட்டது.<br />பென்ணியம் பேசும் ஆண்களுக்குள்ளும் பென்ணுடல் மீதான இச்சைகள் ஒளிந்திருக்கின்றன.மார்க்சியவாதிகளுக்குள் குட்டி பூர்ஷ்வா ஒளிந்திருக்கிறான்.தீண்டாமைக்குப் போராடிக்கொண்டே பூணூல் கனவு காண்பவர்களும் உள்ளார்கள்.உலகம் இசங்களால் மட்டுமல்ல இச்சைகளாலும் ஆனது.<br /><br />தான் இச்சிப்பதை அடைவதற்கு இசங்களையும் வாதங்களையும் முன்வைப்பது பெருகிவிட்டது.இச்சைகளை மற்றவருக்கு மறைப்பதற்காக இசங்களாலான வட்டங்கள் தேவைப்படுகின்றது.கட்புலனாகும் வட்டங்கள் இசங்கள் கொள்கைகள்,கட்புலனாக வட்டங்கள் இச்சைகள்.இவையெல்லாவற்றினதும் மையம் நீங்கள்,நானுமே.<br /><br />இதையெல்லாம் விமர்சனம் பண்ணி இசங்களிலிருந்தும் இச்சைகளிலிருந்தும் விடுபடும் நோக்கமோ அதனை விட்டுவருமாறு உங்களைக் கோரும் நோக்கமோ இந்தப் பொடியனுக்கு இல்லை.எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம். இச்சைகள் பூர்த்தி செய்யப்படுவது இயலாத காரியம்.அதே போன்று எத்தனை இச வட்டங்களை வரைந்து கொண்டாலும் இச்சைகள் கட்புலனாகா வட்டமாக ஒளிந்துகொண்டே ஒளிர்கின்றன.அவற்றை மறைக்கலாம் மறக்க முடியாது.இமய மலை போனாலும் எழும்பி நின்று ஆடத்தான் செய்யும்.வேசங்களைக் களைவது இப்பதிவின் நோக்கங்களில் ஒன்று.<br /><br />அது சமுதாயத்தில் காணும் மனிதர்களின் வேசமாகவும் இருக்கலாம்.எனக்கு நானே போட்டுக்கொண்ட வேசமாகவும் இருக்கலாம்.வேசங்களைக் களைவதென்பது சமூகத்தைச் சீர்திருத்திவிடும் நோக்கமல்ல.அதனைக் களையும் போது தோற்றமளிக்கும் வெற்றுடலைப் பார்ப்பதில் ஒரு குரூர திருப்தி.<br /><br />கொஞ்சம் பொறுங்கோ மைய நீரோட்டத்தில்(தமிழ்மணத்தில்) என் சிறு நீரையும் கலந்துவிட்டு மிச்சத்தைக் கதைக்கிறேன்.<br /><br />இவண்<br />தமிழ்மணத்தின் ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான்<br /><br />ஏற்கனவே தமிழ் வலைப்பதிவுலகில் இருக்கும் லூசுகள் முகமூடிகள் காணாதென்று இன்னுமொன்றா என நீங்கள் நினைக்கலாம் என்ன செய்வது எல்லாம் என் தலைவிதி(அந்தாட்டிக் கண்டத்து மனிதன் ஆதிமனிதன் அவன் முகத்தையெல்லாம் காட்டமுடியாது)IIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-13834718.post-1160826927375456152006-10-14T04:55:00.000-07:002006-10-14T04:55:27.376-07:00மீண்டும்மீண்டும் ஒரு நீண்ட விடுமுறை.அந்தா இந்தா என்று இழுத்தடித்து ஒரு வருடத்திற்கு மேல் ஓடிவிட்டது நான் இந்தப்பக்கம் தலை,கை,கால்,முகம் காட்டி<br /><br />இடையில் அவ்வப்போது தமிழ் வலைப்பதிவுகளின் பக்கம் மேற்குறிப்பிட்ட உறுப்புகளைக் காட்டினாலும் வேலை வாவா என்றது வலைப்பூ போ போவென்றது எழுதத் தூண்டும் சுவாரசியம் இல்லாமற்போனதும் பிறவிக்குணம் சோம்பல் இன்னமும் இறவாமை வேண்டுமென்று அடம்பிடிப்பதுமாய் இந்த வலைப்பதிவின் பக்கம் வரமுடியாமற் செய்துவிட்டன.<br /><br />அன்பிற்குரிய அறிஞர் ஏ.ஜே இறந்துவிட்டார்.அவரை எழுத்தாளர் என்று சொல்வதை விட அறிஞர் அல்லது சிந்தனையாளர் என்று சொல்வதைத் தான் நான் விரும்புகிறேன் ஏனென்றால் வாழும் சமூகத்தில் எழுதிக் குவிப்பதே எழுத்தாளன் பணி என்று வாழ்பவர் மத்தியில் சமரசங்களுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்து காட்டியவர் ஏ.ஜே.<br /><br />ஊரில் இருந்த காலத்தில் அவர் தமிழில் எழுதிய கட்டுரைகளை மல்லிகை இதழில் படித்திருக்கிறேன்.கனடாவில் ஒருமுறை சேரனைச் சந்தித்தபோது அதைப் பற்றிக் கேட்டதோடு ஏ.ஜே இப்போது ஏதாவது எழுதுகிறாரா எனக் கேட்டேன் அண்மைக் காலமாக தமிழில் எதுவுமில்லை என்றார் நிறைய எழுதினால் நீர்த்துப் போய்விடும் என்பது ஏ.ஜேயின் கொள்கையோ என்னவோ.நல்லவேளை ஜெயமோகன் போன்றவர்கள் ஏ.ஜேயைச் சுற்றி இருக்கவில்லை.<br /><br />இடைப்பட்ட காலத்தில் நான் இழந்த இன்னொருவர் பிஸ்மில்லாகான்.அவரது மறைவின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவாவது இந்த வலைப்பதிவை மீண்டும் திறந்திருக்கலாம் ஆனால் அதையும் அவரே தடுத்துவிட்டார் அவரது பைரவி ஆலாபனையும் சிவரஞ்சினி,ஜோன்பூரியும் அதற்கு மேலும் நான் பேசுவது வீணென்று சொல்லிக்கொண்டிருந்தன.தனக்கான சோககீதத்தை தானே பாடி தானே கேட்ட ஒரே ஒருத்தர் பிஸ்மில்லாகானாகத் தான் இருக்க முடியும்<br /><br />அவர்களது ஆத்மா சாந்தியடையவேண்டும்.<br /><br />தமிழ்மணம் திரட்டியில் என் பதிவைத் திரட்டுவதற்கு மூன்று பதிவுகள் எழுத வேண்டுமாம்.இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறேன் அதற்குள் மிரட்டினால் எப்படி.பழைய பதிவுகள் இரண்டை மீள்பிரசுரம் பண்ணிவிட்டேன் அறிந்தவர்கள்,தெரிந்தவர்கள் மன்னிக்க.IIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-13834718.post-1160824524670227552006-10-14T04:14:00.000-07:002006-10-14T04:15:24.696-07:00ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான்நான் ஒரு கிளர்ச்சிக்காக என்னுடைய முன்னைய பதிவில் இவண் ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான் என்று சொல்லிப் போனேன்.<br /><br />சொன்னபின்னர் விடுமுறையின் மயக்கத்தில் அதுபற்றிய நினைவெதுவும் இல்லை.மீண்டு வந்து பதிவுகளை மீள வாசிக்கும்போது 'ஆள வந்தான்' என்ற வார்த்தை உறுத்துகிறது.<br /><br />எனது பொதுவுடமை இசத்தை மீறி 'குட்டிபூர்ஷ்வா' இச்சை தலை காட்டிவிட்டதோ என்றதொரு கலக்கம்.<br /><br />என்னதான் தத்துவங்களைப் படித்து முட்டிக்கொண்டாலும் எனக்குள்ளேயும் ஒரு பூர்ஷ்வா சிந்தனையாளன் உறங்கிக்கொண்டிருப்பதை அறிந்த மயக்கம்.<br /><br />தமிழகத் திரைப்படல்கள் அவ்வப்போது ஆளுமைகளில் செலுத்தும் செல்வாக்கு பற்றி அறிதல் ஆர்வம்.<br /><br />என்னதான் சிந்தித்தாலும் எல்லாவற்றையும் மீறி அந்தப் பாடல் எனக்குப் பிடித்துத் தான் உள்ளது.<br /><br />ஆளவந்தான் படம் ஓரளவு பிடித்திருந்தது.அதைவிட ஆளவந்தானின் பாத்திரப் படைப்பு பிடித்திருந்தது.அதை விட முந்தி வந்தானா பிந்தி வந்தானா ஆளவந்தான் என்ற அரசியல் பிடித்திருந்தது.<br /><br />அண்ணன் ஆளவந்தான்<br />தம்பி அதைப் பறிக்க வந்தான்.<br /><br />முந்தி வந்த தமிழனை பிந்தி வந்த சிங்களம் ஆளுகின்றது.<br /><br />முந்தி வந்த திராவிடனை பிந்தி வந்த ஆரியன் ஆளுகின்றான்.<br /><br />முந்தி இருந்த செவ்விந்தியனை பிந்தி வந்த ஐரோப்பியன் இல்லாமலே செய்தான்.<br /><br />முந்தி வந்த பாலஸ்தீனத்தை பிந்தி வந்த இஸ்ரேல் விழுங்கியது.<br /><br />எங்கெங்கு நோக்கினும் ஆளவந்தானுக்கும் தம்பிக்கும் இடையிலான அதிகாரப் போட்டி கூர்மைப் பட்டுக்கொண்டே செல்கிறது.இன்னோரன்ன காரணங்களைச் சொல்லி ஆளவந்தவர்கள் அழிக்கப்படுகிறார்கள்.<br /><br />இது ஆளவந்தானின் அழிவுடன் நின்றுவிடுமா.இல்லை இல்லவே இல்லை.அவனை அழித்த உரிமை பறிப்பாளனின் உரிமைகளைப் பறிக்க இன்னொரு ஆளவந்தான் வருவான்.<br /><br />குட்டி பூர்ஷ்வா என்னும் மார்க்சியம் கற்றுத்தந்த சொல்லாடலை விட்டுப் பார்த்தால் உலகில் உள்ள அத்தனை மனிதனும் ஆளவந்தான் தான்.<br /><br />காணி நிலம் வேண்டுமெனக் கேட்ட பாரதி.<br />இந்தியாவைக் கனவிலேயே கட்டி வளர்த்த அப்துல் கலாம்.<br />பாட்டாளி நாட்டை கட்டியமைத்த லெனின்.<br />தூய ஆரியர் குலத்தைக் கனவு கண்ட அடொல்ப் ஹிற்லர்.<br />உலக நாடுகளை ஒரு குடைக்கீழ் ஆள விரும்பும் புஷ்<br /><br />அத்தனை பேரும் ஆளவந்தான் தான்.ஒவ்வொருவர் கனவிலும் இருக்கும் வித்தியாசம்.சிலர் தமக்குச் சொந்தமானதை ஆளவந்தார்கள்,சிலர் தமக்குச் சொந்தமானதோடு பிறருக்குச் சொந்தமானது எல்லாமே எல்லோருக்கும் சொந்தமானது என்றார்கள்.சிலர் மற்றவர்களுக்குச் சொந்தமனாதெல்லாவற்றையும் தனது என்றார்கள்.<br /><br />இரண்டாமவன் பொதுவுடமைவாதி,மூன்றாமவன் சர்வாதிகார வாதி.<br /><br />ஒவ்வொரு வாதிக்கும் பின்னால் ஒவ்வொரு ஆளவ்ந்தான் இருக்கிறான்.உலகில் நடக்கும் அத்தனை போர்களுக்கும் காரணம் இந்த ஆளவந்தான்கள் தான்.<br /><br />அதற்காக ஆளவந்தான் கொள்கையே தவறு என்றில்லை.<br /><br />மண்ணாள வந்த கௌதம சித்தார்த்தன் தன்னையே தான் ஆண்டு புத்தனானான்.<br /><br />அவன் வழியில் பலர் தன்னைத்தானே ஆண்டார்கள்.அதாவது பௌத்தம் என்னும் இசத்துக்குள் இச்சைகளை கட்டுப்படுத்தி வாழ்ந்தார்கள்.அவர்களால் தங்களைத் தாங்களே ஆள முடிந்தது.<br /><br />இன்னும் சிலர் அதே புத்தனை முன்வைத்து தரணியாள விரும்புகிறார்கள்.அவர்கள் ஆசைகளை ஆளவந்தார்கள்.<br /><br />இதில் எனக்குள்ளிருக்கும் ஆளவந்தான் யாரென்று வினவுகிறேன்.<br /><br />அவனுக்குள்ளும் சில குட்டிக் குட்டி ஆளவந்தான்கள் இருக்கிறார்கள்.ஒருத்தனுக்கு பெண்களை சைற் அடிக்கப் பிடிக்கும்,ஒருத்தனுக்கு வாசிக்கப் பிடிக்கும்,ஒருத்தனுக்கு இயற்கை பிடிக்கும்<br /><br />ஒட்டுமொத்தமாக ஒரு பொடியன் என்னையே நான் ஆளவந்தான்.குட்டிக் குட்டி ஆளவந்தான்களின் இச்சைகளுக்கு அவ்வப்போது தீனி போடுவதன் மூலம் அவர்களை ஒரு பொடியன் என்ற பெரிய ஆளவந்தான்.அதாவது எனது ஆளுமைக்குள் கொண்டு வருகிறேன்.<br /><br />ஆசைகளைத் துறப்பதென்பது புத்தனால்தான் முடியும்.அவற்றைக் கட்டுப்படுத்துவதென்பது ஒரு பொடியனாலும் முடியும்.<br /><br />ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான் என்றதற்கு இன்னொரு காரணமும் உண்டு.உண்மையில் கண்டங்கள் ஐந்தல்ல ஏழு.<br />இதில் வட அமெரிக்கா,தென்னமெரிக்காவை அமெரிக்கா என்னும் கண்டமாக்கி ஆளற்ற அந்தாண்டிக்காவை விட்டு ஐம்பெருங் கண்டமென்று சொல்வார்கள்.<br /><br />அந்த ஐம்பெருங் கண்டங்களும் எனது பார்வை எல்லைக்குள் இருக்கின்றன.நான் அந்தாட்டிக்காவில் இருக்கிறேன்.நான் கால்நீட்டி உட்கார்ந்தால் ஐம்பெருங் கண்டங்களும் எனது காலடியில் இருக்கும்.<br /><br />உங்களது ஒவ்வொரு அசைவையும் அந்தாட்டிக்கா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டே இருக்கிறது.IIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-13834718.post-1121127580803146952005-07-11T17:14:00.000-07:002005-07-11T17:19:40.810-07:00ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தை.தேனீ இணையத்தளத்தில் ஐரோப்பியவாழ் புத்திசீவிகளும் மனித, மானுட,நான்காம் அகில குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஐரோப்பியாவில் நடத்தப்பட்டு வரும் பின்நவீனத்துவ இலக்கியச் சந்திப்புகள் பற்றி விமர்சனம் என்ற பெயரில் நிகழ்த்தி வரும் கூத்துகளைக் காண முடிகிறது.<br /><br />அதில் மனிதம் யோகராஜா என்பவர் எழுதியிருந்ததில் ஒரு பகுதி.<br />...............................................<br /><br />என்னைப் பொறுத்தவரை நான் புலிகளின் செயற்பாட்டாளன் அல்ல. அவர்களின் செயற்பாடு சார்ந்த அமைப்பு முறையையும் (ளுவசரஉவரசந) ஏற்றுக்கொண்டவனும் அல்ல. ஆனால் இலங்கையில் பெருந்தேசிய, பேரினவாத சக்திகள் வெறிபிடித்தலைகின்ற இன்றைய சூழலில், இவர்களுக்கு எதிரான பெரும் சக்தியாக நிமிர்ந்திருப்பவர்கள் புலிகள்தான். மக்கள் சமூகத்தின் விருப்பு வெறுப்புக்களையும் தாண்டி, கறைபடிந்த பல அத்தியாயங்களுக்கும், அனுபவங்களுக்கும் ஊடாகத்தான் புலிகள் இந் நிலையை வந்தடைந்தார்கள் என்பது உண்மை. புலிகளின் கடைக்கண் பார்வைவீச்சு முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழர்கள் போன்ற சிறிய தேசங்களை வெறித்த போதும், இவர்கள் பேரினவாத சக்திகளுடன் பேரம் பேசுவதற்கும்கூட புலிகளின் பலம் ஆதாரமாக இருக்கின்ற யதார்த்தத்தை உதாசீனம் செய்துவிட முடியாது. இந் நிலையில் புலிகளைப் பலவீனப் படுத்துவதோ அல்லது பலவீனப்படுத்துவதற்கு ஆதரவாக இருப்பதோ, எதுவாயினும் தமிழ்த் தேசத்தின் மீது மேற்கொள்ளப்படும் வரலாற்றுத் தவறாகவே கருதுகிறேன்.<br /><br /><br />இன்று, புலிகள் பற்றிய வரையறுப்பில் நாம் புதிய அணுகுமுறைகளைக் கையாள வேண்டியவர்களாக இருக்கின்றோம். வேறெந்த நாட்டுச் சூழலையும் எமது நாட்டின் யதார்த்த நிலைக்கு உதாரணிக்க முடியாது. தமிழீழ விடுதலையை நோக்கிப் புறப்பட்டவர்களை நாம் இன்று மூன்று பிரிவில் கண்டு கொள்கிறோம். புலிகளைத் தவிர்ந்த சிறிய பிரிவினராக, புலி எதிர்ப்பு வாதிகளும், தமிழீழ தேசத்தை நேசித்துக் கொண்டிருக்கும் ஜனநாயக சக்திகளுமே அவை.<br /><br /><br />ஆய்ந்து நோக்கின், புலி எதிர்ப்பு நிலைப்பாட்டை அரசியல் சார்ந்து நோக்குவதா அன்றி உளவியலுடன் இணைத்துப் பார்பதா என்ற கேள்வியும் எழுகின்றது. புலி எதிர்ப்பு அணியைச் சார்ந்த பலர் ஏதோ ஒருவிதத்தில் புலிகளின் நேரடிப் பாதிப்குக்குட்பட்டவர்கள் என்பதில் இருக்கக்கூடிய தார்மீக நியாயத்தையும் கூர்ந்து நோக்கவேண்டியிருக்கிறது. ஆனால் புலி எதிர்ப்பு என்று கூறி, அரசு சார்பில் நிற்பதன் மூலம் தமிழ்த்தேசம் முழுவதுக்குமான எதிராளிகள் ஆகின்றார்கள் என்பதைப் பரிதாபத்துடன் பார்க்க்வேண்டியுமிருக்கிறது. அதனால் புலகளினால் படுகொலை செய்யப்படுகின்ற புலி எதிர்ப்பாளர்கள், மரித்துப் போகின்றபோதும் தமிழ்த் தேசத்தின் தார்மீகபலத்தை இழந்து, இறகை விட இலேசான இறப்பைத் தழுவிக் கொள்வதும் வேதனையே.<br /><br />தமிழ்த் தேசியத்துடன் எவ்வித தொடர்புமற்ற, புலி எதிர்ப்பாளராகவும் ஒரு பகுதியினர் உள்ளனர். அரசு சார்பற்றவர்களாகக் காணப்பட்ட போதும், பாரம்பரியமாக சிங்களப் பேரினவாதத் திற்குப் பலியாகிப் போனவர்களாக அல்லது இதே பேரினவாதிகளிடம் சரணாகதி அடைந்தவர்களாக காணப்படும் இவர்கள் தம்மை மாக்சிஸ வாதிகள் என்று பீற்றிக்கொளவும் தவறுவதில்லை. இவ்வழி வந்தவர்களில் மானிடனும் ஒருவர்.<br /><br />சும்மா இருப்பதே சுகம் என்றிருக்கும் ஜனநாயக சக்திகளின் நிலைப்பாட்டிலும் தர்க்கரீதியான கேள்வி எழுகின்றது. சுவிஸ் பாராளுமன்றத்தில் (வாக்குப் பதிவில் பங்கெடுக்காது) சும்மா இருந்த மூன்று கம்யூனிட்டுக்களினால் தீவிர வலதுசாரி ஒருவர் அரசவை ஏறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அரசுக்கு எதிரான குரலை உரத்து உயர்த்துகின்ற அதே வேளை, எழுத்து வடிவிலும், அரசியல் வழியிலும் புலிகளை ஜனநாயக வழிக்கு நகர்த்தும் வகையிலான நிர்ப்பந்தங்களை உண்டுபண்ணும் வகையில் ஜனநாயக சக்திகள் செயல்வடிவம் பெறவேண்டும்.<br /><br />ஏற்கனவே உயிர்ப்புப் சஞசிகையும், தமிழீழம் பத்திரிகையும் தொடுத்த எழுத்துக்களால் புலிகள் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியதுண்டு. இவ் வெளியீடுகளில் பாவிக்கப்பட்ட அரசியல் பதங்களை புலிகளின் வெளியீடுகள் சுவீகரித்துக்கொண்டன. முஸ்லிம் மக்கள் சார்பாக புலிகள் பகிரங்க மன்னிப்பைக் கோராவிட்டாலும் அவர்களின் நிலைப்பாட்டில் மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறார்கள்;. சுனாமிப் பேரழிவின் பின்னாலான கௌசல்யனின் நிலைப்பாடு இதைத் தெளிவாக்கியது. இன்னும் சுவிஸ் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் மட்டக்களப்பு பூனொச்சிமுனைக் கிராமத்தில் 'சுவிஸ் முஸ்லிம் கிராமம்' என்ற பெயரில் 75 குடும்பங்களைக் குடியமர்த்தக் கூடிய வீடமைப்புத் திட்டமொன்றை உருவாக்கியுள்ளனர். அரசியல் நோக்கங்கள் இருப்பினும் முஸ்லிம் மக்களை வெறுத்து ஒதுக்கிவிட முடியாது என்ற நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்துக்கும் பின்னால் தமிழீழ ஜனநாயக சக்திகள் மேற்கொண்ட எழுத்து மூலமான நடவடிக்கைகளும் காரணம் என்பதை மறுத்துவிட முடியாது.<br /><br />ஆனால் என்னைப் பொறுத்தவரை சாதியம் என்று வருகின்றபோது தேசம், தமிழ்த் தேச விடுதலை, பாசிசம், பாசிச எதிர்ப்பு, ஜனநாயகம், ஜனநாயகத்துக்கான குரல் என்பதெல்லாமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இணர்டாம் பட்சம்தான்! புலம்பெயர் சூழலில் சாதியம், ஒடுக்கு முறை சார்ந்த செல்நெறிகளைக் கொண்டிருக்காவிட்டாலும் சுயமரியாதை மீதான, உளரீதியான தாக்குதலாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது விடயத்தில் புலிகளின் மௌனத்தையும் உடைக்கும் விதத்தில் செயற்பாடுகள் அமைய வேண்டும்.<br /><br />முடிவாகளூ இலங்கைத் தீவின் இன்றைய சூழலில், மேற்குலக வல்லருசுகளின் ஏகாதிபத்தியத் திரைகளையும் சரி, புலிகளின் எதேச்சததிகாரச் (மானிடன் முன்மொழியும் பாசிசம்) சுவர்க ளையும் சரி மக்கள் இனம் கண்டுகொள்ள வேண்டுமானால், பேரினவாத அரச அதிகார ஒடுக்குமறைகளுக்கு எதிரான போராட்டங்கள் முடிவுக்கு வரவேண்டும்;. தவிர்க்க முடியாதபடி இன்று இப் போராட்டத்தை முன்னெடுக்கும் சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகள்...<br /><br />நாள்என் செய்யும் நாடி வந்த<br />வினைதான் என் செய்யும்<br />கோள்என் செய்யும் கொடுங்...<br /><br />நன்றி :-பரமுவேலன் அண்ணாத்தைIIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-13834718.post-1120889226105530632005-07-08T23:03:00.000-07:002005-07-08T23:11:39.206-07:00விடுமுறை சுகமானது<a href="http://www5a.biglobe.ne.jp/~abc-xyz/illust2/vacation.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://www5a.biglobe.ne.jp/~abc-xyz/illust2/vacation.jpg" border="0" alt="" /></a><br /><br />விடுமுறை சுகமானது.<br /><br />அதுவும் பலமான உடலுழைப்புக்குப் பின்னான விடுமுறைகள் இதத்துடன் கூடவே நலத்தையும் நல்குபவை.<br /><br />அந்த விடுமுறையே கடற்கரையோர நகரமொன்றிற்கானதாகும்போது.சுகம் சுகம் சுகம்.<br /><br />கையில் அபிமான நெருதாவின் கவிதைகள்,என்.டி.ராஜ்குமாரின் கல்விளக்குகள்.பையில் இன்னும் சில புத்தகங்களுடன் போனதை விடுமுறை என்று சொல்ல முடியுமா இல்லை வாசிப்பதற்காக ஓரிடம் ஒதுங்கினேன் என்று செப்பலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.<br /><br />வழமையான ஒருநாட்பொழுதின் வேலைகளில் அலுவலக வேலை மட்டும் இல்லை.மற்றும்படி நீராடினேன் சாப்பிட்டேன்,தூங்கினேன் வாசித்தேன்.இத்தனையும் எனக்கிதுவரை பரிச்சயமில்லாதவொரிடத்தில் மிகப் புதுமையான விதத்தில் நடந்தேறின.<br /><br />ஆனால் புத்தகங்களுடனான உறவாடல் மட்டும் தொன்மையாய் மிகப் பரிச்சயமானதாய் இருந்தது.<br /><br />நீண்ட நாட்களினூடான அவசர ஓட்டத்தின் பின் கடந்த இருவாரங்களாக புத்தகங்களின் வாசனையை நுகர்ந்துகொண்டே அவற்றை வாசிக்க முடிந்தது.<br /><br />வாசித்த நேரத்தில் புத்தகங்களை மார்பில் சாய்த்துக்கொண்டே யோசிக்க முடிந்தது.<br /><br />களைத்த நேரத்தில் புத்தகத்தால் முகம்மூடித் தூங்க முடிந்தது.<br /><br />விடுமுறைகள் இதம் தருபவை.<br /><br />புத்தகத்துடன் கூடிய விடுமுறைகள் அதனிலும் இதமானவை.காதலியுடனான விடுமுறையப் போலவே.<br /><br />என்னுடைய இசத்தினாலாய வட்டங்களிலிருந்து வெளிவந்து விடுமுறையை கொஞ்சம் அனுபவிக்க முடிந்ததில் உண்மையான மகிழ்வு நிரம்பியிருக்கிறது.<br /><br />யார் யாருக்காகவோவெல்லாம் போட்டிருந்த முகமூடிகளை ஒருங்கே தூக்கிப் போட்டுவிட்டு எனக்கேயான பிரத்தியேக முகத்துடன் வாழமுடிந்தது.அடிக்கடி சவரக் கண்ணாடியில் உறுத்தும் தாடி முட்களைப் பிடுங்கும்போதெல்லாம் அருகே மிக அருகே நெருக்கத்தில் குழிவு ஆடியின் உருப்பெருக்கத்தில் தோன்றிய முகம் எனக்கேயானது.அதனை நான் யாருடனும் பங்குபோடத் தேவையில்லை என்ற சுதந்திர உணர்வை விடுமுறை எனக்களித்தது.<br /><br />கற்றழுத்தச் சமனிலைக்காய் இறங்கியும் ஏறியும் ஓடும் விமானத்தின் நடுவே எனக்கான மதுவை மாறி மாறி எடுத்துத் தந்த விமானப் பணிப்பெண்களின் புன்னகை.தனௌள் தெரிந்த ரெடிமேட் தனத்தையும் மீறிய மென்சிரிப்பு<br />நுரைததும்பி வழியாமல் மென்விரல் கொண்டு தடுத்து ஹைனிக்கன் பியரை ஊற்றிய பெண்களின் லாவகமும் மென்சிரிப்புமே<br /> அடிக்கடி பொடியனை நினைவுபடுத்தப் போதுமாயிருந்தன.அந்த நிமிடங்களில் மட்டும் ஆணாதிக்க/பெண்விடுதலைச் சிந்தனைகளை ஓரங்கட்டிவிட்டு ரசிகனாக வாழ்ந்திருந்தேன்.<br /><br /><br />நெடுந்தொலைவில் சூரியன் அமுங்கிய கடற்கரை,பல்நிற பல்லுருவபற்பேத மாந்தரின் பேச்சொலி,நாவில் தடுமாற்றத்தை கொடுக்கும் வொட்காவின் இதமான மணம் அதனுள்ளே சாறழிந்து மிதக்கும் எலுமிச்சைத் துண்டங்கள் எனக்காகக் காத்திராமல் உருகிப் போய்விடும் பனித்துண்டங்கள்.அரையிருட்டிற்கும் மிதப் பொழுதுக்கும் நடுவிலான நேரம், கையில் போதை தரும் கவிதைகளின் புத்தகம்.இத்துடன் கூடிய விடுமுறை இன்னொரு தடவை வரும்வரை <br /><br />மீண்டும் உயிர்பெறும் மடிக்கணணிIIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-13834718.post-1119421031139725702005-06-21T23:11:00.000-07:002005-06-21T23:17:11.140-07:00நானும் என் குழுவினரும்<a href="http://www.phys.unsw.edu.au/~mgb/penguin.jpg ">நானும் என் குழுவினரும்</a><br /><br />பிற்குறிப்பு:உங்களுக்கு மட்டும்தான் புகைப்படத்திற்கு பின் காட்டத் தெரியுமா எங்களுக்கும் தெரியும்<br /><br /><strong>Pablo Neruda - Magellanic Penguin </strong><br /><br />Neither clown nor child nor black<br />nor white but verticle<br />and a questioning innocence<br />dressed in night and snow:<br />The mother smiles at the sailor,<br />the fisherman at the astronaunt,<br />but the child child does not smile<br />when he looks at the bird child,<br />and from the disorderly ocean<br />the immaculate passenger<br />emerges in snowy mourning.<br /><br />I was without doubt the child bird<br />there in the cold archipelagoes<br />when it looked at me with its eyes,<br />with its ancient ocean eyes:<br />it had neither arms nor wings<br />but hard little oars<br />on its sides:<br />it was as old as the salt;<br />the age of moving water,<br />and it looked at me from its age:<br />since then I know I do not exist;<br />I am a worm in the sand.<br /><br />the reasons for my respect<br />remained in the sand:<br />the religious bird<br />did not need to fly,<br />did not need to sing,<br />and through its form was visible<br />its wild soul bled salt:<br />as if a vein from the bitter sea<br />had been broken.<br /><br />Penguin, static traveler,<br />deliberate priest of the cold,<br />I salute your vertical salt<br />and envy your plumed pride.<br /> <br />இதை தமிழில் மொழி பெயர்த்துக்கொண்டிருக்கிறேன்.முடிவில் எனக்கே பிடித்திருந்தால் மட்டும் இங்கே பதிவேன்IIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-13834718.post-1119420484812309602005-06-21T23:02:00.000-07:002005-06-21T23:08:04.816-07:00படிறீ கடை திறவாய்தமிழ்மணம் வலைப்பதிவர் கூடுமிடத்தில் போய் எனது பதிவையும் பட்டியலில் சேர்க்கும்படி இணைத்துவிட்டு வந்தேன்.தமிழ்மணம் என்பது தமிழில் எழுதப்படும் பதிவுகளுக்கு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும்.தற்செயலாக இணையப்பக்கங்களினூடு தெரிந்த தமிழ்மணம் என்னும் பெயரைச் சுட்டியே நான் இந்த வலைப்பதிவுலகிற்கு நுழைந்தேன்.எதைப் பார்ப்பது எதை விடுவதென்று தெரியாமல் பதிவுகள் நிறைந்திருந்தன.ஒரு ஐந்நூறு இருக்குமா?<br />தமிழில் இவ்வளவு பேர் வலைபதிவது மிகவும் மகிழ்வைத் தருகிறது.ஓரிரண்டு நண்பர்களையும் இங்கே சந்திக்கக்கூடும்.நான் முகமிலியாக இருந்தாலும் முகமுள்ளவர்களை நான் பார்க்க முடியுமல்லவா.<br /><br />படித்துக்கொண்டே இருக்கிறேன் முடியவில்லை.எது நல்ல பதிவு எது சாதாரணப் பதிவு என்று தெரியாமல் எல்லாவற்றையும் படிக்க களைப்பாக உணர்கிறேன்.எங்காவது பதியப்பட்டவற்றில் நல்லவற்றைத் தொகுத்து அல்லது சுட்டிகளைத் தொகுத்து வைத்திருக்கிறார்களா தெரியவில்லை.இல்லையாயின் இனி வருபவர்களுக்காக நானாவது ஒன்றைத் தொகுக்கலாம் என்றிருக்கிறேன்.<br /><br />இருவார தமிழ்மண ஓட்டத்தில் நேற்றுத்தான் நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தால் என்னவென்று தோன்றியது.தோன்றியதும் தமிழ்மணத்தில் கொடுத்திருந்த சுட்டிகளைத் தட்டி வாசித்ததில் போதுமான புரிதல் கிடைத்தது.அதிலும் யுனிகோட் எழுத்துரு பற்றி காசி என்பவர் எழுதியிருந்த கட்டுரை மிகப்பயனுடையது.ஒரு பதிவை ஆரம்பித்து நேற்றிருந்த மனநிலையைப் பதிந்தும் விட்டேன்.<br /><br />தமிழ்மணத்தில் நானாக இணைத்துக் கொண்டாலும் எனது பதிவு பட்டியலில் தெரியவில்லை.அதற்கு ஏதாவது விசேட அனுமதி வேண்டுமா தெரியவில்லை.விதிகளில் சிறியதொரு குழப்பம் நிலவுகிறது.<br /><br />தமிழ்மணத்தில் பதியும் போது கண்டம் கேட்கிறார்கள் என்னுடைய கண்டம் பட்டியலில் இல்லை :(<br /><br />நான் தமிழ்மணத்தின் ஐம்பெருங் கண்டங்களுக்கும் அடங்கவில்லை.ஆகவே நான் ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான்.<br /><br />நிறைய எழுதலாம் நானே எழுதி நானே படிக்க அலுப்பாயிருக்கிறது.பேசாமல் 'Love in the Time of Cholera' புத்தகத்தை வாசித்து முடிக்கலாம் இடையில் நிற்கிறது.IIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-13834718.post-1119335092958810972005-06-20T23:09:00.000-07:002005-06-21T02:34:56.003-07:00இசங்கள் பாதி இச்சைகள் பாதி கலந்து செய்த மனிதன் நான்தமிழில் எழுதத் தெரிந்தவர்களெல்லாம் எழுத ஆசைப்படும் பத்தியை நானுமெழுத வந்தேன்.ஏற்கனவே இருக்கும் முகமூடிகளுக்குப் போட்டியுமல்ல இங்கே பத்தியெழுதும் பெட்டைக்குப் போட்டியுமல்ல.<br /><br />பின்னவீனத்துவம்,முற்போக்கு,மார்க்சியம்.ட்ரொஸ்கீயம்,தமிழ்த்தேசியம்,<br />பேரினவாதம்,பாசிசம்,இருத்தலியம்,எக்சிடென்சியலிசம்,சேடிசம்,மசாக்கிசம்,மாந்திரீக யதார்த்தவாதம்,பெண்ணியம்,ஆணாதிக்கம்.கற்பு,கறுப்பு,ஆண்மை,பெண்மைகற்பிதங்கள்,<br />உலோகாயுதம்,ரியலிசம்,நியோ ரியலிசம்,ஸ்டாலினசம்,இந்துத்வா,இஸ்லாமிய அடிப்படைவாதம்,தீவிரவாதம்,பயங்கரவாதம்என்று அரசியல்,சமூக,இலக்கியங்களில் நிலவும் அத்தனை நடப்புக்கும் ஒவ்வொரு பெயர் சொல்லுறாங்களே ஈதெல்லாம் என்னவாக இருக்கும் என்று பூராய ஆரம்பித்த பதிவு.<br /><br />பூராயப் பூராய இசங்களாகவும் வாதங்களாகவும் விரிந்துகொண்டிருக்கும் உலகில் தனியொருவனாகத் தத்தளித்து பின் அதுவே இன்னொரு வாதமாகவோ இசமாகவோ போய்விடலாமென மனம் தேறி ஆரயப் புறப்பட்டு வாதங்களில் பலனின்றி பக்க வாதத்திலும் பாரிச வாதத்திலும் உழன்று.தக்கதொரு இடமாய் தமிழ்மணத்தைக் கண்டின்புற்றீங்கு வந்தேன்<br /><br /><br />இந்த உலகம் மனிதர்களால் நிரம்பியிருக்கிறது.மனிதர்களோ இசங்களாலும் வாதங்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.இவைகளோ மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.தானே உருவாக்கிய கடவுளை தானே தாள்பணிந்தாற்போல, இவைகளோ மனிதனை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிட்டன.<br /><br />தன்னைத் தானே சுற்றி இசங்களாலான கோடுகளையோ வட்டங்களையோ வரைந்துகொண்டு வழுவாமல் வாழ்வதற்கு முயற்சி செய்கிறான்.அந்த வட்டங்களில் சில சிறுவட்டங்கள் சில பெருவட்டங்கள்,சில நீள்வட்டங்கள் சில வட்டம்போற் தோன்றும் பரவளைவுகள் ஒவ்வொன்றின் இயல்புக்கேற்பவும் தன்னையும் சீரமைத்துக் கொள்வதிலும் இனங்காட்டிக் கொள்வதிலும் இந்த மனிதன் படும் பாடு இருக்கிறதே அம்மம்மா சொல்லி மாளாதது சொல்லில் எழுதாதது.<br /><br />தனது வட்டத்திற்குள் மற்றவனை இழுத்தல்.மாற்றானின் வட்டம் பக்கம் வரும்போதெல்லாம் தாவி அதனுள் கலத்தல்.தன்னுடைய வட்டத்தை வாதங்களால் நிலைநிறுத்தல்.நிறுத்த முடியாத போதெல்லாம்.இசங்களையும் வாதங்களையும் குறைசொல்லல்.ஒன்றுக்கு மாற்றாக இன்னொன்றைப் பிரச்சாரம் செய்தல் என்று காலம் முழுவதும் இசங்களுடனும் வாதங்களுடனும் ஓடுகிறது மனித வாழ்க்கை.இவர்கள் பலவட்டங்களாற் சூழப்பட்ட மையங்கள்<br /><br />கடவுள் கூட இந்த இசங்களின் முன்னைய வடிவம்தான் என்பது தெளிவு. ஈதெல்லாவற்றினதும் முடிபு ஆன்மீகம் எனச் செப்புவோர் கூட தாமிருப்பது இன்னோர் வட்டமே என்றுணர்வதில்லை.வெற்றானந்தப் பெருவெளியிற் சுற்றித் திளைப்பதாகப் பாவனை பண்ணுதல் மட்டுமே அவர்களால் முடிகிறது.வட்டங்கள் கோடுகளாலானவை<br /><br />இசங்கள் கொள்கைகள் என்றால் கொள்ளையிலே போன இச்சைகள் மட்டும் மனிதனை விட்டுவிடுகிறதா.இச்சைக்கும் கொள்கைக்கும் இழுபறிப்படுவதே மனித வாழ்வாகிப்போய்விட்டது.<br />பென்ணியம் பேசும் ஆண்களுக்குள்ளும் பென்ணுடல் மீதான இச்சைகள் ஒளிந்திருக்கின்றன.மார்க்சியவாதிகளுக்குள் குட்டி பூர்ஷ்வா ஒளிந்திருக்கிறான்.தீண்டாமைக்குப் போராடிக்கொண்டே பூணூல் கனவு காண்பவர்களும் உள்ளார்கள்.உலகம் இசங்களால் மட்டுமல்ல இச்சைகளாலும் ஆனது.<br /><br />தான் இச்சிப்பதை அடைவதற்கு இசங்களையும் வாதங்களையும் முன்வைப்பது பெருகிவிட்டது.இச்சைகளை மற்றவருக்கு மறைப்பதற்காக இசங்களாலான வட்டங்கள் தேவைப்படுகின்றது.கட்புலனாகும் வட்டங்கள் இசங்கள் கொள்கைகள்,கட்புலனாக வட்டங்கள் இச்சைகள்.இவையெல்லாவற்றினதும் மையம் நீங்கள்,நானுமே.<br /><br />இதையெல்லாம் விமர்சனம் பண்ணி இசங்களிலிருந்தும் இச்சைகளிலிருந்தும் விடுபடும் நோக்கமோ அதனை விட்டுவருமாறு உங்களைக் கோரும் நோக்கமோ இந்தப் பொடியனுக்கு இல்லை.எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம். இச்சைகள் பூர்த்தி செய்யப்படுவது இயலாத காரியம்.அதே போன்று எத்தனை இச வட்டங்களை வரைந்து கொண்டாலும் இச்சைகள் கட்புலனாகா வட்டமாக ஒளிந்துகொண்டே ஒளிர்கின்றன.அவற்றை மறைக்கலாம் மறக்க முடியாது.இமய மலை போனாலும் எழும்பி நின்று ஆடத்தான் செய்யும்.வேசங்களைக் களைவது இப்பதிவின் நோக்கங்களில் ஒன்று.<br /><br />அது சமுதாயத்தில் காணும் மனிதர்களின் வேசமாகவும் இருக்கலாம்.எனக்கு நானே போட்டுக்கொண்ட வேசமாகவும் இருக்கலாம்.வேசங்களைக் களைவதென்பது சமூகத்தைச் சீர்திருத்திவிடும் நோக்கமல்ல.அதனைக் களையும் போது தோற்றமளிக்கும் வெற்றுடலைப் பார்ப்பதில் ஒரு குரூர திருப்தி.<br /><br />கொஞ்சம் பொறுங்கோ மைய நீரோட்டத்தில்(தமிழ்மணத்தில்) என் சிறு நீரையும் கலந்துவிட்டு மிச்சத்தைக் கதைக்கிறேன்.<br /><br />இவண்<br />தமிழ்மணத்தின் ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான்IIஒரு பொடியன்IIhttp://www.blogger.com/profile/12976640499581025360noreply@blogger.com2