Tuesday, June 21, 2005

நானும் என் குழுவினரும்

நானும் என் குழுவினரும்

பிற்குறிப்பு:உங்களுக்கு மட்டும்தான் புகைப்படத்திற்கு பின் காட்டத் தெரியுமா எங்களுக்கும் தெரியும்

Pablo Neruda - Magellanic Penguin

Neither clown nor child nor black
nor white but verticle
and a questioning innocence
dressed in night and snow:
The mother smiles at the sailor,
the fisherman at the astronaunt,
but the child child does not smile
when he looks at the bird child,
and from the disorderly ocean
the immaculate passenger
emerges in snowy mourning.

I was without doubt the child bird
there in the cold archipelagoes
when it looked at me with its eyes,
with its ancient ocean eyes:
it had neither arms nor wings
but hard little oars
on its sides:
it was as old as the salt;
the age of moving water,
and it looked at me from its age:
since then I know I do not exist;
I am a worm in the sand.

the reasons for my respect
remained in the sand:
the religious bird
did not need to fly,
did not need to sing,
and through its form was visible
its wild soul bled salt:
as if a vein from the bitter sea
had been broken.

Penguin, static traveler,
deliberate priest of the cold,
I salute your vertical salt
and envy your plumed pride.

இதை தமிழில் மொழி பெயர்த்துக்கொண்டிருக்கிறேன்.முடிவில் எனக்கே பிடித்திருந்தால் மட்டும் இங்கே பதிவேன்

படிறீ கடை திறவாய்

தமிழ்மணம் வலைப்பதிவர் கூடுமிடத்தில் போய் எனது பதிவையும் பட்டியலில் சேர்க்கும்படி இணைத்துவிட்டு வந்தேன்.தமிழ்மணம் என்பது தமிழில் எழுதப்படும் பதிவுகளுக்கு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும்.தற்செயலாக இணையப்பக்கங்களினூடு தெரிந்த தமிழ்மணம் என்னும் பெயரைச் சுட்டியே நான் இந்த வலைப்பதிவுலகிற்கு நுழைந்தேன்.எதைப் பார்ப்பது எதை விடுவதென்று தெரியாமல் பதிவுகள் நிறைந்திருந்தன.ஒரு ஐந்நூறு இருக்குமா?
தமிழில் இவ்வளவு பேர் வலைபதிவது மிகவும் மகிழ்வைத் தருகிறது.ஓரிரண்டு நண்பர்களையும் இங்கே சந்திக்கக்கூடும்.நான் முகமிலியாக இருந்தாலும் முகமுள்ளவர்களை நான் பார்க்க முடியுமல்லவா.

படித்துக்கொண்டே இருக்கிறேன் முடியவில்லை.எது நல்ல பதிவு எது சாதாரணப் பதிவு என்று தெரியாமல் எல்லாவற்றையும் படிக்க களைப்பாக உணர்கிறேன்.எங்காவது பதியப்பட்டவற்றில் நல்லவற்றைத் தொகுத்து அல்லது சுட்டிகளைத் தொகுத்து வைத்திருக்கிறார்களா தெரியவில்லை.இல்லையாயின் இனி வருபவர்களுக்காக நானாவது ஒன்றைத் தொகுக்கலாம் என்றிருக்கிறேன்.

இருவார தமிழ்மண ஓட்டத்தில் நேற்றுத்தான் நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தால் என்னவென்று தோன்றியது.தோன்றியதும் தமிழ்மணத்தில் கொடுத்திருந்த சுட்டிகளைத் தட்டி வாசித்ததில் போதுமான புரிதல் கிடைத்தது.அதிலும் யுனிகோட் எழுத்துரு பற்றி காசி என்பவர் எழுதியிருந்த கட்டுரை மிகப்பயனுடையது.ஒரு பதிவை ஆரம்பித்து நேற்றிருந்த மனநிலையைப் பதிந்தும் விட்டேன்.

தமிழ்மணத்தில் நானாக இணைத்துக் கொண்டாலும் எனது பதிவு பட்டியலில் தெரியவில்லை.அதற்கு ஏதாவது விசேட அனுமதி வேண்டுமா தெரியவில்லை.விதிகளில் சிறியதொரு குழப்பம் நிலவுகிறது.

தமிழ்மணத்தில் பதியும் போது கண்டம் கேட்கிறார்கள் என்னுடைய கண்டம் பட்டியலில் இல்லை :(

நான் தமிழ்மணத்தின் ஐம்பெருங் கண்டங்களுக்கும் அடங்கவில்லை.ஆகவே நான் ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான்.

நிறைய எழுதலாம் நானே எழுதி நானே படிக்க அலுப்பாயிருக்கிறது.பேசாமல் 'Love in the Time of Cholera' புத்தகத்தை வாசித்து முடிக்கலாம் இடையில் நிற்கிறது.

Monday, June 20, 2005

இசங்கள் பாதி இச்சைகள் பாதி கலந்து செய்த மனிதன் நான்

தமிழில் எழுதத் தெரிந்தவர்களெல்லாம் எழுத ஆசைப்படும் பத்தியை நானுமெழுத வந்தேன்.ஏற்கனவே இருக்கும் முகமூடிகளுக்குப் போட்டியுமல்ல இங்கே பத்தியெழுதும் பெட்டைக்குப் போட்டியுமல்ல.

பின்னவீனத்துவம்,முற்போக்கு,மார்க்சியம்.ட்ரொஸ்கீயம்,தமிழ்த்தேசியம்,
பேரினவாதம்,பாசிசம்,இருத்தலியம்,எக்சிடென்சியலிசம்,சேடிசம்,மசாக்கிசம்,மாந்திரீக யதார்த்தவாதம்,பெண்ணியம்,ஆணாதிக்கம்.கற்பு,கறுப்பு,ஆண்மை,பெண்மைகற்பிதங்கள்,
உலோகாயுதம்,ரியலிசம்,நியோ ரியலிசம்,ஸ்டாலினசம்,இந்துத்வா,இஸ்லாமிய அடிப்படைவாதம்,தீவிரவாதம்,பயங்கரவாதம்என்று அரசியல்,சமூக,இலக்கியங்களில் நிலவும் அத்தனை நடப்புக்கும் ஒவ்வொரு பெயர் சொல்லுறாங்களே ஈதெல்லாம் என்னவாக இருக்கும் என்று பூராய ஆரம்பித்த பதிவு.

பூராயப் பூராய இசங்களாகவும் வாதங்களாகவும் விரிந்துகொண்டிருக்கும் உலகில் தனியொருவனாகத் தத்தளித்து பின் அதுவே இன்னொரு வாதமாகவோ இசமாகவோ போய்விடலாமென மனம் தேறி ஆரயப் புறப்பட்டு வாதங்களில் பலனின்றி பக்க வாதத்திலும் பாரிச வாதத்திலும் உழன்று.தக்கதொரு இடமாய் தமிழ்மணத்தைக் கண்டின்புற்றீங்கு வந்தேன்


இந்த உலகம் மனிதர்களால் நிரம்பியிருக்கிறது.மனிதர்களோ இசங்களாலும் வாதங்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.இவைகளோ மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.தானே உருவாக்கிய கடவுளை தானே தாள்பணிந்தாற்போல, இவைகளோ மனிதனை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிட்டன.

தன்னைத் தானே சுற்றி இசங்களாலான கோடுகளையோ வட்டங்களையோ வரைந்துகொண்டு வழுவாமல் வாழ்வதற்கு முயற்சி செய்கிறான்.அந்த வட்டங்களில் சில சிறுவட்டங்கள் சில பெருவட்டங்கள்,சில நீள்வட்டங்கள் சில வட்டம்போற் தோன்றும் பரவளைவுகள் ஒவ்வொன்றின் இயல்புக்கேற்பவும் தன்னையும் சீரமைத்துக் கொள்வதிலும் இனங்காட்டிக் கொள்வதிலும் இந்த மனிதன் படும் பாடு இருக்கிறதே அம்மம்மா சொல்லி மாளாதது சொல்லில் எழுதாதது.

தனது வட்டத்திற்குள் மற்றவனை இழுத்தல்.மாற்றானின் வட்டம் பக்கம் வரும்போதெல்லாம் தாவி அதனுள் கலத்தல்.தன்னுடைய வட்டத்தை வாதங்களால் நிலைநிறுத்தல்.நிறுத்த முடியாத போதெல்லாம்.இசங்களையும் வாதங்களையும் குறைசொல்லல்.ஒன்றுக்கு மாற்றாக இன்னொன்றைப் பிரச்சாரம் செய்தல் என்று காலம் முழுவதும் இசங்களுடனும் வாதங்களுடனும் ஓடுகிறது மனித வாழ்க்கை.இவர்கள் பலவட்டங்களாற் சூழப்பட்ட மையங்கள்

கடவுள் கூட இந்த இசங்களின் முன்னைய வடிவம்தான் என்பது தெளிவு. ஈதெல்லாவற்றினதும் முடிபு ஆன்மீகம் எனச் செப்புவோர் கூட தாமிருப்பது இன்னோர் வட்டமே என்றுணர்வதில்லை.வெற்றானந்தப் பெருவெளியிற் சுற்றித் திளைப்பதாகப் பாவனை பண்ணுதல் மட்டுமே அவர்களால் முடிகிறது.வட்டங்கள் கோடுகளாலானவை

இசங்கள் கொள்கைகள் என்றால் கொள்ளையிலே போன இச்சைகள் மட்டும் மனிதனை விட்டுவிடுகிறதா.இச்சைக்கும் கொள்கைக்கும் இழுபறிப்படுவதே மனித வாழ்வாகிப்போய்விட்டது.
பென்ணியம் பேசும் ஆண்களுக்குள்ளும் பென்ணுடல் மீதான இச்சைகள் ஒளிந்திருக்கின்றன.மார்க்சியவாதிகளுக்குள் குட்டி பூர்ஷ்வா ஒளிந்திருக்கிறான்.தீண்டாமைக்குப் போராடிக்கொண்டே பூணூல் கனவு காண்பவர்களும் உள்ளார்கள்.உலகம் இசங்களால் மட்டுமல்ல இச்சைகளாலும் ஆனது.

தான் இச்சிப்பதை அடைவதற்கு இசங்களையும் வாதங்களையும் முன்வைப்பது பெருகிவிட்டது.இச்சைகளை மற்றவருக்கு மறைப்பதற்காக இசங்களாலான வட்டங்கள் தேவைப்படுகின்றது.கட்புலனாகும் வட்டங்கள் இசங்கள் கொள்கைகள்,கட்புலனாக வட்டங்கள் இச்சைகள்.இவையெல்லாவற்றினதும் மையம் நீங்கள்,நானுமே.

இதையெல்லாம் விமர்சனம் பண்ணி இசங்களிலிருந்தும் இச்சைகளிலிருந்தும் விடுபடும் நோக்கமோ அதனை விட்டுவருமாறு உங்களைக் கோரும் நோக்கமோ இந்தப் பொடியனுக்கு இல்லை.எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம். இச்சைகள் பூர்த்தி செய்யப்படுவது இயலாத காரியம்.அதே போன்று எத்தனை இச வட்டங்களை வரைந்து கொண்டாலும் இச்சைகள் கட்புலனாகா வட்டமாக ஒளிந்துகொண்டே ஒளிர்கின்றன.அவற்றை மறைக்கலாம் மறக்க முடியாது.இமய மலை போனாலும் எழும்பி நின்று ஆடத்தான் செய்யும்.வேசங்களைக் களைவது இப்பதிவின் நோக்கங்களில் ஒன்று.

அது சமுதாயத்தில் காணும் மனிதர்களின் வேசமாகவும் இருக்கலாம்.எனக்கு நானே போட்டுக்கொண்ட வேசமாகவும் இருக்கலாம்.வேசங்களைக் களைவதென்பது சமூகத்தைச் சீர்திருத்திவிடும் நோக்கமல்ல.அதனைக் களையும் போது தோற்றமளிக்கும் வெற்றுடலைப் பார்ப்பதில் ஒரு குரூர திருப்தி.

கொஞ்சம் பொறுங்கோ மைய நீரோட்டத்தில்(தமிழ்மணத்தில்) என் சிறு நீரையும் கலந்துவிட்டு மிச்சத்தைக் கதைக்கிறேன்.

இவண்
தமிழ்மணத்தின் ஐம்பெருங் கண்டங்கள் ஆளவந்தான்